Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நலன் வேண்டி திருவிளக்கு வழிபாடு ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: டிச., 25ல் பரமபத வாசல் திறப்பு ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: டிச., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்ட ஏகாதசி: பக்தர்களுக்கு வழங்க லட்டு தயாரிக்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
வைகுண்ட ஏகாதசி: பக்தர்களுக்கு வழங்க  லட்டு தயாரிக்கும் பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

22 டிச
2020
11:12

ராசிபுரம்:  ராசிபுரம் பொன்வரதாஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியில் பக்தர்களுக்கு வழங்க, 50 ஆயிரம் லட்டு தயார் செய்யும் பணி தொடங்கியது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், மேட்டுத்தெருவில் வரலாற்று சிறப்பு மிக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறக்கும் நிகழ்ச்சி, வரும், 25 காலை, 5:00 மணிக்கு நடக்கவுள்ளது. இதையொட்டி, ராசிபுரம் ஜனகல்யாண் அமைப்பினர் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1,000 கிலோ கடலை மாவு, 1,000 கிலோ சர்க்கரை, 50 கிலோ நெய், 1,000 கிலோ கடலை எண்ணெய், 50 கிலோ முந்திரி, ஏலக்காய், 25 கிலோ திராட்சை ஆகியவற்றை கொண்டு, 50 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தொடங்கியது. 50 தொழிலாளர்களும் நேற்றுடன், 10 ஆயிரம் லட்டுகளை தயாரித்துள்ளனர். ஏற்பாடுகளை, ஜன கல்யாண் அமைப்பு தலைவர் பரந்தாமன், செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதேபோல், ஆர். புதுப்பாளையம் கரியபெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு வழங்க 10 ஆயிரம் லட்டுகள்; பட்டணம் கரிய பெருமாள் கோவிலில், 7,000 லட்டுகளை தயாரித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar