Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அயோத்தி ராமர் கோவிலுக்கு மக்கள் ... ஹெத்தையம்மன் பண்டிகை: டிச., 30 உள்ளூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் விழா: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2020
04:12

 சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாட்டுகளுடன், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா எளிமையான முறையில், கொண்டாடப்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில், உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் விழா டிச., 25ல் கொண்டாடப்படுகிறது. இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும் நாளே கிறிஸ்துமஸ் விழா.ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை பகிர்ந்து கொண்டு, கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாடினால், கிறிஸ்து நம்மில் இருப்பார் என்பது நம்பிக்கை. நம்முடைய நேரத்தை பிறருக்காக செலவு செய்ய வேண்டும். எதிரிகளை மன்னித்து, அவர்களை நேசித்தால், அதுவே சிறந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என, கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு பெற்ற கிறிஸ்துமஸ் விழா, சென்னை, புறநகரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாட்டுடன் நடந்தது.

சாந்தோம் தேவாலயம்: சென்னை, சாந்தோம் புனித தோமையார் அகில உலக திருத்தலப் பேராலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், குறைந்த அளவு பக்தர்களுடன் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அங்கு, டோக்கன் முறை அறிமுகப் படுத்தப்பட்டு, கட்டுப்பாடு விதிமுறைகளை கடைப்பிடித்து, குறைந்தளவு பக்தர்களுடன் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அனுமதி கிடைக்காதவர்கள் சாந்தோம் சாலையில் நின்று, சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.

பெசன்ட்நகர் ஆலயம்: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில்,கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். குடும்பத்துடன் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டிய ராஜன் கூறியதாவது: வர உள்ள புத்தாண்டில், சிறந்த சிந்தனைகள், அச்சமற்ற உணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.அதனை வலியுறுத்தும் வகையிலும், அதேநேரம் அரசின் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளான சமூக இடைவெளி, முக கவசம், சுத்தமாக சுகாதாரமாக இருப்பது குறித்தும், சிறப்பு வழிபாட்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது ஒரு, சுகமான அனுபவமாக இருந்தது.இவ்வாறு, அவர் கூறினார். அதேபோல, செயின்ட் தாமஸ் மவுன்ட் பேராலயம், சின்னமலை சர்ச், சென்னை உள்ளிட்ட தேவாலயங்களில்கிறிஸ்துமஸ் விழா சிறப்பு பிரார்த்தனையுடன் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar