Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திட்டக்குடி அறிவு திருக்கோயிலில் ... திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் குவிந்த பக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தாண்டு பிறப்பு; ஈரோடு கோவில்களில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
புத்தாண்டு பிறப்பு; ஈரோடு கோவில்களில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

02 ஜன
2021
02:01

ஈரோடு: ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி, தரிசனம் செய்ய குவிந்த பக்தர்களால், கோவில்கள் களை கட்டின.

ஆங்கில புத்தாண்டு பிறப்பான நேற்று, ஈரோட்டில் அனைத்து கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடந்தது. ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் மூலவர், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதேபோல், கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில், மாநகராட்சி ராஜகணபதி வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சி தந்தனர். கோட்டை பத்ரகாளியம்மன், கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவிலில், நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். பத்ர காளியம்மன் கோவில் குண்டத்தில் தீபம் ஏற்றினர். கருங்கல்பாளையம் சீரடி சாய்பாபா கோவிலில், சுவாமிக்கு நெய் அபிஷேகம் நடந்தது. கோவில்களில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால், பல மாதங்களுக்குப் பிறகு, கோவில்கள் நேற்று சகஜ நிலைக்கு திரும்பின.

* கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், காலை, 6:00 மணி முதலே, ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகே, கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அம்மன் சன்னதி எதிரே, 60 அடி நீள குண்டத்தில், பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். இதேபோல் கோபி சாரதா மாரியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
கோவை; கோவை ரேஸ்கோர் சிலுள்ள சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்பாள் அன்னப்பட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar