மேல்மருவத்துாருக்கு 27ம் தேதி வரை சக்தி மாலை அணிந்து இருமுடி கட்டலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2021 10:01
விழுப்புரம்: மேல்மருவத்துாருக்கு, வரும் 27ம் தேதி வரை சக்தி மாலை அணிந்து, இருமுடி ஏந்தி செல்லலாம் என விழுப்புரம் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் மாவட்ட தலைவர் ஜெயபாலன் கூறினார்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் சக்தி மாலை அணிந்த பக்தர்கள் இருமுடி ஏந்தி செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேற்று முன்தினம் 500 பக்தர்கள் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமையில், இருமுடி ஏந்தி மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலுக்கு புறப்பட்டனர்.அப்போது, மாவட்ட தலைவர் ஜெயபாலன் கூறியதாவது:சித்தர் பீடத்தில் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். சித்தர் பீடத்தில் காலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை சக்தி மாலை அபிேஷகம் நடக்கிறது.சக்தி பீடத்திலும், வார வழிபாட்டு மன்றத்திலும் தலைவர் அல்லது பொறுப்பாளர்களை அணுகி சக்தி மாலை அணிந்து கொள்ளலாம். பொது இடங்கள், பள்ளி, திருமண மண்டபங்கள், வீடு மற்றும் வேறு சில கோவில்களில் சக்தி மாலை அணியக்கூடாது.வரும் 27ம் தேதி வரை சக்தி மாலை அணிந்து அபிேஷகம் செய்யலாம் என்றார்.