Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகூர் தர்காவில் பாய்மரம் ஏற்றம் உத்திரமேரூர் குடவோலை கல்வெட்டு சுற்றுலா பயணியர் அதிகரிப்பு உத்திரமேரூர் குடவோலை கல்வெட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகனை தரிசிக்க பக்தர்கள் பாதயாத்திரை
எழுத்தின் அளவு:
பழநி முருகனை தரிசிக்க பக்தர்கள் பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

11 ஜன
2021
03:01

வீரபாண்டி: தை முதல் நாளில், பழநி முருகனை தரிசிக்க, 50ம் ஆண்டாக, சேலத்தில் இருந்து, பாதயாத்திரையை, பக்தர்கள் தொடங்கினர்.

சேலம் மாவட்டம், பூலாவரியைச் சேர்ந்தவர் பழனிசாமி, 70. இவரது தலைமையில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் இணைந்து, 50 ஆண்டுக்கு முன், திருமுருகன் திருச்சபை அமைப்பை தொடங்கினர். தொடர்ந்து, பூலாவரியில் இருந்து, பழநிக்கு பாதயாத்திரை சென்று, தை முதல் நாளில், பழநிமலை முருகனை தரிசித்து வருகின்றனர். நடப்பாண்டு, 50ம் ஆண்டாக, பாதயாத்திரை செல்வோர், கடந்த ஆண்டு நவ., 23 முதல், ஒருவர் பின் ஒருவராக, மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். அவர்கள், நேற்று காலை, பூலாவரி முருகன் கோவிலில், சிறப்பு பூஜை செய்து, கையில் வேல் ஏந்தி, பாதயாத்திரையை தொடங்கினர். தொடர்ந்து, உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், தரிசனம் செய்துவிட்டு, கோவிலுக்கு வெளியே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். மாலை, 4:00 மணிக்கு, பழநியை நோக்கி, கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா கோஷம் முழங்க, நடைபயணத்தை தொடங்கினர்.

இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது: தமிழ் கடவுள் முருகனை, தை முதல் நாளில் தரிசித்தால், ஆண்டு முழுதும் நல்ல பலன் கிடைக்கும். 50ம் ஆண்டாக, பாதயாத்திரையை தொடங்கி உள்ளோம். காலை, 2:00 முதல், 7:00 மணி வரை, மாலை, 3:00 முதல், இரவு, 10:00 மணி வரை என, தினமும், 50 கி.மீ., நடப்போம். ஆண்டுதோறும், பாதயாத்திரை செல்வதால், வழியில் கோவில் நிர்வாகிகள், மடம், அன்பர்கள், அன்னதானம் வழங்கி, தங்க இடம் கொடுத்து உபசரிக்கின்றனர். தை முதல் நாளான, ஜன., 14ல் பழநியை அடைந்து, முருகனை தரிசித்து, அன்றிரவு பஸ் மூலம் சேலம் வருவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபம் விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கல்பாத்தி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஐப்பசி மாத அஷ்டமியையொட்டி, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar