மேல்மலையனுார் கோவிலில் ரூ.42.15 லட்சம் உண்டியல் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2021 04:01
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் உண்டியலில் 42 லட்சத்து 15ஆயிரத்து 902 ரூபாய் வசூலானது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசை முடிந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டன.
மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ராமு,ஜோதி, செஞ் சி சரக ஆய்வாளர் அன்பழகன்ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணி நடந்தது. அதில், 42 லட்சத்து 15 ஆயிரத்து 902 ரூபாய் பண ம், 180 கிராம் தங்க நகை , 265 கிராம் வௌ்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில், செயல் அலுவலர்கள் திருவக்கரை சிவக்குமார், கோலியனுார் சூரியநாராயணன், அறங்காவலர்கள் சரவணன், செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.