Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோயில் தெப்பத்திற்கு ... ஆல்கொண்டமால் திருவிழா 42 கால்நடைகள் தானம் ஆல்கொண்டமால் திருவிழா 42 கால்நடைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவநாமம் குறித்து கருத்து: காமாட்சிபுரி ஆதீனம் கடும் கண்டனம்
எழுத்தின் அளவு:
சிவநாமம் குறித்து கருத்து: காமாட்சிபுரி ஆதீனம் கடும் கண்டனம்

பதிவு செய்த நாள்

21 ஜன
2021
03:01

பல்லடம்: சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் சிவநாமத்தை இழிவுபடுத்தி விமர்சித்ததற்கு, காமாட்சிபுரி ஆதீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக, கருத்து சுதந்திரம் என்ற பெயரில், இந்து மதத்தையும், மதம் சார்ந்த நம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் விதமாக பேசுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி யூடியூபில் வெளியிடப்பட்ட பதிவு கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இந்து மதத்தினர் மட்டுமன்றி, பல்வேறு மதம் சார்ந்த ஆன்மீக பெரியோர்கள், மதகுருமார்கள், ஆதீனங்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் ஓய்வதற்கு முன்பாக, கந்தபுராண பாடல் வரிகளை மாற்றி அமைத்து, அதன் மூலம் தி.மு.க., விளம்பரம் தேட முயன்றது. தி.மு.க.,வினரின் இச்செயலுக்கும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனங்கள் எழுந்தன. இச்சூழலில், சென்னையை சேர்ந்த சிவயோகி சிவக்குமார் என்பவர் சிவநாமத்தை இழிவுபடுத்தும் விதமாக முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இது குறித்து காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறுகையில், சைவர்களும், சிவனடியார்களும் அனுதினமும் போற்றி வணங்கும் திருச்சிற்றம்பலம் எனும் சிவ நாமத்தை சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தரக்குறைவாக விமர்சித்து விளம்பரம் தேட முயன்றுள்ளார். மத நம்பிக்கையை சீர்குலைக்கும் எழில் ஈடுபடும் இது போன்ற நபர்களை வன்மையாக கண்டிக்கிறோம். தினந்தோறும் இந்து தர்மத்தையும், தமிழர்களுடைய மனம் புண்படும்படியும் ஆன்மீகத்தை கொச்சைப்படுத்தும் செயல் வாடிக்கையாகி வருகிறது. லட்சக்கணக்கில் கோவில்களில் கூடும் பக்தர்கள் இதற்குத் தக்க பதிலடி கொடுக்காவிட்டால் நாம் இந்துக்களாக வாழ்வதில் அர்த்தமில்லை. இது போன்ற தேச துரோகிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து இவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar