பதிவு செய்த நாள்
28
ஜன
2021
03:01
தியாகதுருகம்: தியாகதுருகத்தில் புதிதாக கட்டப்பட்ட சிவன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. தியாகதுருகம் அடுத்த ஆண்டி கொட்டகையில் விருகாவூர் சாலையை ஒட்டி பாலாம்பிகை சமேத செம்பொன் சோதிநாதர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. நேற்று விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜை துவங்கியது. கள்ளக்குறிச்சி திருநாவுக்கரசர் திருமடம் சிவனடியார் சிவ நாச்சியப்பன் தலைமையில் வேள்வி வழிபாடு நடந்தது.
காலை திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு முடிந்து கடம் புறப்பட்டு கோயிலை வலம் வந்தது. அதைத் தொடர்ந்து 9: 40 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. திருப்பணி குழுவினர் சிவ முருகேசன், சிவ புவனேஸ்வரன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அய்யப்பா, தே.மு.தி.க., மாவட்ட அவைத்தலைவர் கோவிமுருகன், பரணி ஷூமார்ட் பழனி, தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், ஜே.எஸ்., மளிகை சுரேஷ்பாபு, செந்தில் முருகன் ஹார்டுவேர்ஸ் வெங்கடேசன், ரியல் எஸ்டேட் அய்யப்பன், மருந்தாளுநர் நேரு, ஓம் முருகா டிராவல்ஸ் சக்திவேல், பூக்கடை மகாலிங்கம் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.