புதுச்சேரி; இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் 1008 சஹஸ்ரசங்காபிஷேகம் நடந்தது.புதுச்சேரி அடுத்த இரும்பை குபேரன் நகரில், பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இரண்டு நாள் சங்காபிஷேக விழா நேற்று துவங்கியது. மாலை 5.௦௦ மணிக்கு விக்னேஸ்வர பூஜையை தொடர்ந்து, 1008 சஹஸ்ர சங்காபிஷேகம் நடந்தது. மூல மந்திர ஹோமத்திற்கு பிறகு, சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.இன்று (28ம் தேதி) காலை 7.30 மணிக்கு கோ பூஜை, மூல மந்திர ஹோமம், 1008 சங்காபிஷேகம், நெய்வேத்தியம், தீபாராதனை நடக்கின்றது. இரவு 7.00 மணிக்கு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.உற்சவர் உள்புறப்பாடு நடக்கிறது.