Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தத்தில் கன்னிமார் தீர்த்தம் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக விழா துவக்கம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா: 21ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா: 21ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

17 பிப்
2021
02:02

திருப்பூர்: கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றான திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பழமை வாய்ந்தது. மேற்கு நோக்கிய சிவாலயம் அமைந்துள்ள சிறப்பு பெற்ற கோவிலில், இக்கோவில். சுந்தரர் வேடுபறி திருவிளையாடல் நிகழ்த்திய இத்தலத்தில், மாசி மாதம் தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. அவ்வகையில், 20ம் தேதி இரவு கிராமசாந்தியும், 21ம் தேதி காலை கொடியேற்றமும் நடைபெறுகிறது.

22ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சி, 23ல் பூதவாகனம், சிம்மவாகன காட்சி, 24ல் புஷ்ப விமானகாட்சி, 25ல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ரிஷப வாகன காட்சி நடக்கிறது.விழாவில், வரும், 26ல், திருக்கல்யாண உற்சவம், 27ம் தேதி அதிகாலை, திருமுருகநாதர் தேரில் எழுத்தருளும் நிகழ்ச்சியும், மதியம், 2:00 மணிக்கு மூன்று தேர்களை வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஒரே நாளில், மூன்று தேர்களும் நிலையை வந்தடைகின்றன.மறுநாள், பரிவேட்டை, குதிரை மற்றும் சிம்மவாகன காட்சி, தெப்பத்தேர் உற்சவமும் நடக்கின்றன. மார்ச் 1ம் தேதி சுந்தரர் வேடுபறி திருவிழாவும், 2ம் தேதி பிரம்மதாண்டவ தரிசன காட்சியும் நடைபெறுகிறது. மார்ச் 3ம் தேதி காலை மஞ்சள் நீர் விழாவும், இரவு மயில் வாகன காட்சியுடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.கலை நிகழ்ச்சி இல்லைகொரோனா தொற்று பரவலை தடுக்க, பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், விழாவுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கோவில் வளாகத்தில் தற்காலிக கடைகள், ராட்டிணம் போன்றவை அமைக்க அனுமதியில்லை. கோவில் வளாகத்தில், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கவும் அனுமதி இல்லை.மண்டப கட்டளை மட்டும், கோவில் வளாகத்தில் நடக்கும். ஆன்மிக கலை நிகழ்ச்சி அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar