Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தத்தில் கன்னிமார் தீர்த்தம் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக விழா துவக்கம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி மக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா: 21ல் கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
திருமுருகநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா: 21ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

17 பிப்
2021
02:02

திருப்பூர்: கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றான திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், பழமை வாய்ந்தது. மேற்கு நோக்கிய சிவாலயம் அமைந்துள்ள சிறப்பு பெற்ற கோவிலில், இக்கோவில். சுந்தரர் வேடுபறி திருவிளையாடல் நிகழ்த்திய இத்தலத்தில், மாசி மாதம் தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது. அவ்வகையில், 20ம் தேதி இரவு கிராமசாந்தியும், 21ம் தேதி காலை கொடியேற்றமும் நடைபெறுகிறது.

22ம் தேதி சூரிய சந்திர மண்டல காட்சி, 23ல் பூதவாகனம், சிம்மவாகன காட்சி, 24ல் புஷ்ப விமானகாட்சி, 25ல் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ரிஷப வாகன காட்சி நடக்கிறது.விழாவில், வரும், 26ல், திருக்கல்யாண உற்சவம், 27ம் தேதி அதிகாலை, திருமுருகநாதர் தேரில் எழுத்தருளும் நிகழ்ச்சியும், மதியம், 2:00 மணிக்கு மூன்று தேர்களை வடம் பிடிக்கும் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஒரே நாளில், மூன்று தேர்களும் நிலையை வந்தடைகின்றன.மறுநாள், பரிவேட்டை, குதிரை மற்றும் சிம்மவாகன காட்சி, தெப்பத்தேர் உற்சவமும் நடக்கின்றன. மார்ச் 1ம் தேதி சுந்தரர் வேடுபறி திருவிழாவும், 2ம் தேதி பிரம்மதாண்டவ தரிசன காட்சியும் நடைபெறுகிறது. மார்ச் 3ம் தேதி காலை மஞ்சள் நீர் விழாவும், இரவு மயில் வாகன காட்சியுடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.கலை நிகழ்ச்சி இல்லைகொரோனா தொற்று பரவலை தடுக்க, பக்தர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும்; சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். குறிப்பாக, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், விழாவுக்கு வருவதை தவிர்க்க வேண்டுமென, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கோவில் வளாகத்தில் தற்காலிக கடைகள், ராட்டிணம் போன்றவை அமைக்க அனுமதியில்லை. கோவில் வளாகத்தில், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கவும் அனுமதி இல்லை.மண்டப கட்டளை மட்டும், கோவில் வளாகத்தில் நடக்கும். ஆன்மிக கலை நிகழ்ச்சி அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வளர்பிறை பிரதோஷத்தை  முன்னிட்டு, பெரிய நந்திய ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வில்வ ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் நல்லுாரில் அமைந்துள்ள சங்கரா செவிலியர் கல்லுாரி வளாகத்தில் உள்ள முகாமில், ... மேலும்
 
temple news
சென்னை; தி.நகர்., பத்மாவதி தாயார் கோவிலில் நடந்து வரும் பவித்ரோத்ஸவத்தை முன்னிட்டு இன்று மகா கும்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar