Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ... இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் திருக்கல்யாணம் இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
11ம் நுாற்றாண்டு சதிகல் சாலவாக்கத்தில் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
11ம் நுாற்றாண்டு சதிகல் சாலவாக்கத்தில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

25 பிப்
2021
01:02

 உத்திரமேரூர்; உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், சாலவாக்கத்தில், 11ம் நுாற்றாண்டை சார்ந்த அரிய சதிகல் ஒன்றை கண்டெடுத்தனர். உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவைஆதன் மற்றும் பேராசிரியர் பாலமுருகன் ஆகியோர், உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில், நேற்று முன்தினம், கள ஆய்வு மேற்கொண்டனர்.


போலீஸ் நிலையம் அருகே, பிள்ளையார் கோ வில் வளாகத்தில், சதி கல் ஒன்றை கண்டெடுத்தனர்.இது குறித்து, உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:சதிகல் என்பது, தன் இனக்குழுவுக்காக, ஊரை காக்கவோ, போர் அல்லது வேட்டையின் போதோ, ஒரு வீரன் இறந்து விட்டால், அவரின் மனைவி, இறந்த கணவரின் உடலோடு தீ மூட்டி, ஊரார் முன் தன் உயிரை மாய்த்துக் கொள்வார்.இவ்வாறு உயிர் நீத்த, இருவரின் நினைவாக நினைவுக்கல் எழுப்பி, கிராமத்தினர் வழிபட்டு வருவர். இதற்கு சதிகல் என பெயர்.சாலவாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட சதிகல், 11ம் நுாற்றாண்டை சார்ந்தது. 1.5 அடி உயரம் மற்றும் அகலம் கொண்டது. இதில், வீரன், மனைவிக்கு இடையில், ஓர் அழகிய மரம் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, நடுகல் மற்றும் சதிக்கற்களில், இதுவரை மரம் இடம் பெற்றதாக தகவல் இல்லை. இது, அரிதான சிற்பம்.இவ்வாறு அவர் கூறினார். சாலவாக்கத்தில், அரிதாக கண்டெடுக்கப்பட்ட சதி கல்லை பாதுகாக்க, தமிழக தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar