Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கோவிலில் ரங்கசாமி ... பூண்டி கோவிலில் தினமலர் செய்தியால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் கோயில் வந்தது ஜெயமால்யதா : பராமரிக்க திருச்செந்தூர் கோயில் பாகன்கள் நியமனம்
எழுத்தின் அளவு:
ஆண்டாள் கோயில் வந்தது ஜெயமால்யதா : பராமரிக்க திருச்செந்தூர் கோயில் பாகன்கள் நியமனம்

பதிவு செய்த நாள்

05 மார்
2021
05:03

ஸ்ரீவில்லிபுத்துார்: மேட்டுபாளையம் யானைகள் புத்துணர்வு முகாம்சென்ற ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, பட்டர்கள், பக்தர்களின்உற்சாகமான வரவேற்புடன் கோயிலுக்கு வந்தது.

இதை பராமரிக்க திருச்செந்துார் கோயில் பாகன்கள் இருவர் புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு 2011ல் அசாமில் இருந்து யானை ஜெயமால்யதா கொண்டு வரபட்டது. கேரளாவை சேர்ந்த பாகன் ராஜா பராமரித்து வந்தார். மேட்டுபாளையத்தில் நடந்த யானைகள் புத்துணர்வு முகாமிற்கு பிப்.6 அன்று அழைத்து செல்லபட்டது.இதனிடையே யானையை பாகன் ,உதவியாளர் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவியதையடுத்து இருவரையம் கோயில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

கோவை வனத்துறை இருவரையும் கைது செய்தது.பாகன் சிறையிலடைக்கபட்ட நாள் முதல் யானை ஜெயமால்யதா, புத்துணர்வு முகாமில் ஒருவித பரிதவிப்புடன் காணப்பட்டது. இதனையறிந்த அறநிலையத்துறை, வனத்துறையினர் யானையை மீண்டும் ஆண்டாள் கோயிலுக்கே அனுப்ப முடிவு செய்தனர். பாகனின் கட்டளைக்கே யானை கட்டுபட்டதால் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு கொண்டு வருவதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில் சிறையிலிருந்த பாகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கபட்டு அவரது பாதுகாப்பு , பராமரிப்பிலே நேற்று காலை 10:45 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் அழைத்து வரப்பட்டது. தெற்குரதவீதி விடயத்து மண்டபத்திற்கு வந்தடைந்த யானையைகோயில் தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், பட்டர் சுதர்சன், ஸ்தானிகம் ரமேஷ் வரவேற்று பழங்களை கொடுத்தனர். ஜெயமால்யதாவை பராமரிக்க திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலை சேர்ந்த பாகன்கள் சுப்பிரமணி, திருப்பதி நியமிக்கபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar