Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருப்பண சுவாமி கோயிலில் சிவராத்திரி ... பகவத் கீதை இ - புத்தகம்: பிரதமர் வெளியிட்டார் பகவத் கீதை இ - புத்தகம்: பிரதமர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரக்குமார் சுவாமி கோயிலில் தேரோட்டம்: பக்தர்கள் உற்சாகம்
எழுத்தின் அளவு:
வீரக்குமார் சுவாமி கோயிலில் தேரோட்டம்: பக்தர்கள் உற்சாகம்

பதிவு செய்த நாள்

12 மார்
2021
10:03

வெள்ளகோவில்: வெள்ளகோவில், வீரக்குமார சுவாமி 138 ம் ஆண்டு மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. உற்சாகமாக பக்தர்கள் வடம் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக பிப்ரவரி 22 ம் தேதி திங்கட்கிழமை தேர் முகூர்த்தக்கால் போடப்பட்டு, மார்ச் 5 ம் தேதி தேர் கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 3 மணி அளவில் பள்ளய பூஜை நடந்தது. மாலை 6 மணி அளவில் தேர்தல் நிகழ்ச்சி நடந்தது.

செல்லாண்டியம்மன் சுவாமி வைத்த சிறிய தேர் முன்னால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் இழுத்துச் சென்றனர். தொடர்ந்து வீரக்குமாரசாமி திருத்தேர் பக்தர்கள் உற்சாகமாக வடம்பிடித்து இழுத்தனர். மாலை 5 மணி அளவில் அவிட்ட நட்சத்திரத்தில் சுவாமியை ரதத்திற்கு எழுந்தருளச் செய்தல், தொடர்ந்து மாலை 6 மணி அளவில் திருத்தேர் நிலை பெயர்த்தல், காங்கேயம் டி.எஸ்.பி., தனராசு, வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், செயல்அலுவலர் ரத்தினம் பாள், கோவில் குலத்தவர்கள், நற்பணி மன்றத்தினர், முன்னாள் அறங்காவலர்கள், உட்பட பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் கோவிலின் பின்புறம் இரண்டாம் நிலைப் பகுதியில் 6.30 மணிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இன்று மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் தேரோட்டம் நடைபெற்று தேர் நிலை சேர்தல் நிகழ்ச்சி நடைபெறும் தொடர்ந்து தேவஸ்தான மண்டப கட்டளை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளைகுலத்தவர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆவணி முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar