Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் தெப்ப திருவிழா ... கூடலுார் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கூடலுார் மகா மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் ஆழி தேரோட்டம் பக்தர்கள் வெள்ளம் பரவசம்
எழுத்தின் அளவு:
திருவாரூர் ஆழி தேரோட்டம் பக்தர்கள் வெள்ளம் பரவசம்

பதிவு செய்த நாள்

26 மார்
2021
01:03

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம், நேற்று, ஆரூரா தியாகேசா கோஷங்கள் முழங்க, கோலாகலமாக நடந்தது.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் தோன்றிய காலத்தை கூற முடியாத அளவு பெருமை பெற்றது என, திருநாவுக்கரசர் பாடியுள்ளார். இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது, ஆழித்தேர். இத்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரியது. தேரின் உயரம் 96 அடி; எடை 350 டன்.திருச்சி, பெல் நிறுவனம், ஆழித்தேரை நவீனமயமாக்கி, ஹைட்ராலிக் பிரேக் அமைத்துள்ளது. கடந்த ஆண்டு, கொரோனா பாதிப்பு காரணமாக, தேரோட்டம் நடைபெறவில்லை. கடந்த, 1990, 1991ம் ஆண்டுகளில், ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடந்தது. அதன்பின், நடப்பு ஆண்டு தான், ஆயில்ய நட்சத்திரத்தில் , தேரோட்டம் நடந்தது.முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு தேரில், தியாகராஜ சுவாமி எழுந்தருளினார்.

சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. காலை, 7:38 மணிக்கு, கலெக்டர் சாந்தா தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஆரூரா... தியாகேசா கோஷங்கள் முழங்க தேரை இழுத்தனர்.ஆடி அசைந்த நிலையில் புறப்பட்ட ஆழித்தேர், பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்கு பின், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டன. கீழ ரதவீதியில் கிளம்பிய ஆழித்தேர், இரவு, 7:20 மணிக்கு நிலையை அடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar