Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடி பெருமாள் கோயிலில் மார்ச் 28 ... பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கபாலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2021
02:03

 சென்னை - மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்களில், பங்குனி மாதப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி மாத பெருவிழா, ஆண்டுதோறும், 10 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டு, 19ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர் திருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.நேற்று அதிகாலை, கபாலீஸ்வரர் - கற்பகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. காலை, 8:00 மணிக்கு, தம்பதி சமேதராக, தேரில் எழுந்தருளினர்.காலை, 8:45 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து தேர் இழுத்தனர். பஞ்ச மூர்த்தி புறப்பாட்டுடன், நான்கு மாட வீதிகளிலும், தேரில் கபாலீஸ்வரர் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.மதியம், 12:00 மணிக்கு, தேர், நிலைக்கு வந்தது. மாலை, தேரில் இருந்து கோவிலுக்கு, கபாலீஸ்வரர் எழுந்தருளினார்.இதையடுத்து, யானை வாகனங்களில், ஐந்திருமேனிகள் விழா நடந்தது. பிரதான நிகழ்வாக இன்று, திருஞான சம்பந்தர் அங்கம் பூம்பாவையை உயிர்ப்பித்தல், வெள்ளி விமானத்தில் இறைவன், அறுபத்து மூன்று நாயன்மார்களோடு காட்சியளித்தல் விழா நடக்கிறது.மருந்தீஸ்வரர் கோவிலில் தேர்சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில், பங்குனிப் பெருவிழாவின் ஏழாம் நாளான நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, சந்திரசேகரர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார்.காலை, 5:45 மணிக்கு, பக்தர்களால், தேர், வடம் பிடித்து இழுக்கப்பட்டது. காலை, 9:30 மணிக்கு, தேர், நிலைக்கு வந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அருளைப் பெற்றனர்.இன்று, பரிவேட்டை விழா நடக்கிறது. 27ம் தேதி கல்யாணசுந்தர் திருக்கல்யாணம், விமானக்காட்சி, அகத்தியருக்கு திருமணக் காட்சி, வன்னிமரக் காட்சி ஆகியவை நடக்கின்றன.வரும், 28ம் தேதி, திரிபுரசுந்தரி, தியாகராஜ சுவாமி திருமண விழா, கொடியிறக்கம், வால்மீகி முனிவருக்கு, 18 திருநடனக் காட்சியருளி, வீடுபேறு அளித்தல் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar