Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாக்.,கில் 100 ஆண்டு ஹிந்து கோயிலை ... வெற்றிவேல் குன்றத்தில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புகழ்பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் குண்டம் விழா
எழுத்தின் அளவு:
புகழ்பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் குண்டம் விழா

பதிவு செய்த நாள்

30 மார்
2021
05:03

அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்றது

திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா கடந்த 24 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இன்று (30ம் தேதி) குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, அதிகாலை 4 : 00 மணிக்கு அம்மனுக்கு அலங்காரத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, காப்புக் கட்டிய பூசாரிகள் கை குண்டம் வாரி இறைத்து குண்டம் இறங்கினர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை. 8 : 00 மணிக்கு குண்டம் மூடுதல், அம்மனுக்கு சிறப்பு அக்கி அபிஷேகம், அபிஷேக ஆராதனை, அம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு. மதியம் 2 : 00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேரில் வீதி உலா வருதல். 3 : 00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை 31 ம் தேதி மற்றும் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை தினசரி காலை 7 : 30 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, அம்மன் சேஷ வாகனத்தில் திருவீதி உலா வருதல். மாலை 7 : 00 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவில், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளால் பக்தர்கள் மிக குறைவாகவே காணப்பட்டனர். வரிசையாக சென்று அம்மனை தரிசிக்க தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு சுகாதார துறை சார்பில், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே தரிசிக்க அணிவிக்கப்பட்டது. அவிநாசி டி.எஸ்.பி பாஸ்கர், மேற்பார்வையில், பெருமாநல்லூர் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், தலைமையில், ஆயுதப்படை போலீசார் மற்றும் போலீசார் ஊர்காவல்படை ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar