Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் பங்குனி ... 40 அடி உயர பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் 40 அடி உயர பாலமுருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குண்டத்து காளியாதேவி கோவிலில் குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:
குண்டத்து காளியாதேவி கோவிலில் குண்டம் திருவிழா

பதிவு செய்த நாள்

01 ஏப்
2021
11:04

மேட்டுப்பாளையம்: ஊமப்பாளையம் குண்டத்து காளியாதேவி கோவிலில், நேற்று குண்டம் திருவிழா நடந்தது.

மேட்டுப்பாளையம் அருகே ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் 32 ம் ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த மாதம், 16 ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து குண்டம் திறத்தல், அம்மன் அழைத்தல், விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகங்களும், அக்னிச்சட்டிகளும் அழைத்து வரப்பட்டனர். பின்பு குண்டம் திறந்து பூ வளர்த்து, அலகு குத்தி பக்தர்கள் வந்தனர். அதை தொடர்ந்து நேற்று காலை, பவானி ஆற்றிலிருந்து, கோவிலுக்கு அம்மன் சுவாமியை அலங்காரம் செய்து சப்பரத்தில் எடுத்து வந்தனர். காலை, 7:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. கோவில் தலைமை பூசாரி பழனிசாமி குண்டத்தை வலம் வந்து, மலர் பந்தை உருட்டி விட்டார். அதை தொடர்ந்து, பூசாரிகள் அருளுடன் குண்டத்தில் இறங்கினர். அவரைத் தொடர்ந்து அருள்வாக்கு பூசாரி காளியம்மாள், முருகேசன், ரங்கராஜ் உட்பட அளவு குத்திய பக்தர்களும், ஆண்களும், பெண்களும் குண்டம் இறங்கினர்.

இவ்விழாவில் ஓடந்துறை ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், வார்டு கவுன்சிலர்கள் உஷாதேவி, விஜயலட்சுமி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மன், மகா முனீஸ்வரருக்கு அக்னி அபிஷேகமும், மஞ்சள் நீராட்டு, பொங்கல், மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நாளை அம்மனுக்கு, 108 இளநீர் அபிஷேக அலங்கார பூஜையும், 5 ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar