Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஆழ்வார்குறிச்சி கோயிலில் கொடை ... கரிவலம் கோயிலில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2012
11:06

அரியலூர்: அரியலூர் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. அரியலூர் அருகே வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 97 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோயில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய, கிராம பொதுமக்கள் சார்பில் முடிவெடுக்கப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருப்பணி துவங்கியது. இடையில் சில ஆண்டுகள் தொய்வடைந்து இருந்த கோயில் திருப்பணி நடவடிக்கைகள், கொல்லிமலை பகவான் காமராஜ் ஸ்வாமிகள் முயற்சியால், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் துவங்கி நடந்தது. இதையடுத்து, வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில், விநாயகர், முனியப்ப ஸ்வாமி மற்றும் பரிவார தேவதைகள் ஆலயத்துக்கு அஷ்டபந்தனம் சாத்தி, மகா கும்பாபிஷேகம் செய்வதற்கான யாகசாலை பூஜைகள், கடந்த 5ம் தேதி காலை 9 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த யாகசாலை பூஜைகளை தொடர்ந்து, வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில், விநாயகர் முனியப்ப ஸ்வாமி மற்றும் பரிவார தேவதைகளின் ஆலய கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. கொல்லிமலை பகவான் காமராஜ் ஸ்வாமிகள் தலைமையில் நடந்த இக்கும்பாபிஷேத்தை, ராஜேந்திர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். கும்பாபிஷேக விழாவில் கோயில் திருப்பணி குழு தலைவரும், வெங்கடகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவருமான முத்துசாமி, பெரம்பலூர் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்ரமணியன் மற்றும் திருப்பணிக்குழு நிர்வாகிகள், கிராம நாட்டாமைகள், பொதுமக்கள், பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar