இருக்கன்குடி பங்குனி திருவிழா: குறைந்தது பக்தர்கள் வருகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2021 05:04
சாத்துார்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பங்குனி மாதம் கடைசி வெள்ளித்திருவிழாவில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில் திருவிழா மற்றும் மத சம்பந்தமான கூட்டங்கள் நடத்த அரசு இன்று முதல் தடை செய்துள்ளது. இந்நிலையில் நேற்று இருக்கன் குடி மாரியம்மன் கோவில் பங்குனி மாதம் கடைசி வெள்ளித்திருவிழாவின் போது இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி , நென்மேனி, என். மேட்டுப் பட்டி, கே.மேட்டுப்பட்டி பகுதி மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைப்பது வழக்கம் , மறுநாள் முனைப்பாரி எடுத்து வந்து சுற்றி வருவது வழக்கம் , கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்த நிலையில் நேற்று கோவிலுக்கு வழக்கத்தை விட பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.