சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கால்நடை துறை அமைச்சர் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2021 05:04
சீர்காழி: சட்டைநாதர் சுவாமி கோயிலில் நேற்று இரவு தமிழக கால்நடைத்துறை அமைச்சர் சிறப்பு வழிபாடு நடத்தினார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் சிவபெருமான் மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் இத்தளத்தில் உமையம்மை ஞானப்பால் ஊட்டிய தால் திருஞானசம்பந்த பெருமான் தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகம் ஆன தோடுடைய செவியன் என்ற பதிகத்தை பாடியது சிறப்பு வாய்ந்தது இக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் சுக்கிரவார பூஜையில் கலந்துகொண்டு சட்டநாத சுவாமியை வழிபட்டால் அரசியல் மேன்மை கிடைக்கும் என்பது ஐதீகம் இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நேற்று இரவு தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வந்தார் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது தொடர்ந்து அமைச்சர் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் தோணியப்பர் சட்டைநாதர் மற்றும் திருநிலைநாயகி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்தார் தொடர்ந்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சுக்கிரவார பூஜையில் கலந்து கொண்டார்.