Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா ... ஐயப்பன் கோவிலில் அமாவாசை வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
11 ஆண்டுகளாக தடைபடும் பிரான்மலை கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஏப்
2021
10:04

சிங்கம்புணரி: பிரான்மலை கோயில் திருவிழா தொடர்ந்து 11 ஆண்டுகளாக நடக்காததால் அப்பகுதி மக்களும் பக்தர்களும் கவலையில் உள்ளனர்.

சங்க இலக்கியத்தில் பாடல் பெற்றதும் பாண்டியநாட்டு 14 ஆவது திருத்தலங்களில் 5வது சிறப்புக்குரியதுமான பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயிலுக்கு திருக்கொடுங்குன்றம் என்ற பெயரும் உண்டு. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத் திருவிழா பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த 2011 ல் பாலாலயம் செய்யப்பட்டது. இதனால் அந்த ஆண்டு முதல் திருவிழா நிறுத்தப்பட்டது. திருப்பணி வேலைகள் தாமதமாகி கும்பாபிஷேகம் கடந்த 2019 செப். 12 ல் தான் நடந்தது. அதுவரை திருவிழா நடக்காக நிலையில் கும்பாபிஷேகம் முடிந்தபிறகு 2020 ல் நடக்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனல் கொரோனா பரவலால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு கடந்த ஆண்டும் சித்திரைத் திருவிழா ரத்தானது. இதனால் பொதுமக்களும் பக்தர்களும் மன வேதனைக்கு ஆளாகினர். இந்நிலையில் பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வந்தநிலையில் இந்த ஆண்டு நிச்சயம் திருவிழா நடக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் மீண்டும் பலத்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். வருகின்ற ஏப். 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கவிருந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் காரணமாக திரு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் இப்பகுதி மக்களும், பக்தர்களும் சொல்ல முடியாத வேதனையில் உள்ளனர். மதுரை சித்திரைத் திருவிழாவை போன்று பிரான்மலை கோயிலிலும் சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் திருவிழாவை நடத்த அரசும், கோயில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar