திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை(ஏப்., 14) மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் மற்ற மூலவர்கள் கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஷ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளிக் ககவசங்கள் சாத்துப்படியாகிறது. காலை முதல் இரவு கோயில் நடை சாத்தும்வரை கவசங்கள் சாத்துப்படி செய்யப்பட்டிருக்கும். புத்தாண்டு சிறப்பு பூஜை, பஞ்சாங்கம் வாசித்தல், கோயில் நிலங்களில் கிராமத்தினர் 4 ஏர் பூட்டி உழுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.