Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டிவனத்தில் ராமநவமி ‌உற்சவம் அருணாசலேஸ்வரர் கோவிலில் பொம்மை பூ கொட்டும் நிகழ்ச்சி அருணாசலேஸ்வரர் கோவிலில் பொம்மை பூ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராம நவமி விழா கோலாகலம்: உடுமலை கோவிலில் அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
ராம நவமி விழா கோலாகலம்: உடுமலை கோவிலில் அபிஷேக ஆராதனை

பதிவு செய்த நாள்

22 ஏப்
2021
03:04

 உடுமலை: பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலையிலுள்ள கோவில்களில், ராம நவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சித்திரை மாத வளர்பிறை நவமி நாள், ராமபிரானின் அவதார தினமாக கருதப்படுகிறது.

அன்றைய தினத்தை, ராம நவமியாக கொண்டாடுவது வழக்கம்.இந்நிலையில், பொள்ளாச்சியிலுள்ள வைணவ கோவில்களில், நேற்று ராம நவமி விழா சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்பட்டது. டி.கோட்டாம்பட்டி கோதண்ட ராமர் கோவிலில், ராம நவமி விழா திருக்கல்யாண ஊஞ்சல் உற்சவ விழாவாக கொண்டாடப்பட்டது.நேற்று முன்தினம் காலை ராமருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை மங்கள இசை, திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து, சீதா, ராமர் திருக்கல்யாணம், சிறப்பு பூஜைகள் நடந்தன.

மாலை, திருஊஞ்சல் சேவை, வீணை இசை கச்சேரி, இரவு சீதா, ராமர் சயனா திவாசத்துடன் விழா நிறைவடைந்தது.சின்னநெகமம் ரோட்டில், விழுதில்லா ஆலமரத்தடியில், பட்டாபிராமர் கோவிலில், நேற்று காலை, 6:30 மணிக்கு மங்கள இசையுடன் திருப்பாவை பாராயணம் படிக்கப்பட்டது. தொடர்ந்து, சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்கள் மலர் துாவி வணங்கினர்.ஆதியூர் ராமர் கோவிலில், சீதாராமர் திருக்கல்யாண உற்சவமும், சிறப்பு பூஜையும் நடந்தது. இதில், சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ராம நவமியை முன்னிட்டு, பெருமாளுக்கு ஒன்பது வகை திரவியங்களால் அபிஷேகம், ஒன்பது வகை பூக்களால் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

உடுமலைஉடுமலை தில்லை நகரில் ஆனந்தசாயி கோவிலில், ராமநவமியையொட்டி, நேற்று காலை யாகசாலை பூஜைகள் நடந்தன.தொடர்ந்து ராமர், சீதைக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி ஆஞ்சநேயர், சீதை, ராமர், லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர், அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.,2ல் துவங்கி நவ., 7ல் சூரசம்ஹாரம், நவ., 8 திருக்கல்யாண உற்சவம் நடைபெற ... மேலும்
 
temple news
கோவை, மருதமலை சுப்ரமணியர் சுவாமி கோவில் மற்றும் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி காந்திமதி அம்மன் இன்று காலை பச்சை ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ 2.99 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar