கிராம கோவிலில் பூத்துள்ள நாகலிங்க மலர்கள்: மக்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2021 02:05
கூடலூர்: கூடலூர் கோழிபாலம், அருகே முனிஸ்வரன் கோவிலில், கொத்துக் கொத்தாக பூத்துள்ள நாகலிங்க மலர்கள் மக்களை பரவச படுத்தி வருகிறது..
நீலகிரி மாவட்டத்தில், நாகலிங்கப் பூக்களின் சீசன் துவங்கியுள்ளது. குன்னூர் சாலையோரங்களில் காணப்படும் இதன் பூக்கள் தற்போது, கூடலூரில் சில கோவில்களிலும், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் பூத்துள்ளது. தாவர மையம் மூடப்பட்டுள்ளதால், கோழிக்கோடு சாலை கோழிபாலம் அருகே, சாலையோரம் உள்ள முனீஸ்வரன் கோவில் உள்ள மரத்தில் நாகலிங்கப் பூக்கள் கொத்துக்கொத்தாய் பூத்துள்ள நாகலிங்க பூக்களின் அழகை உள்ளூர் மக்களையும் அவ்வழியாக செல்பவர்களின் பரவசப்படுத்தி வருகிறது. சமஸ்கிருதத்தில் நாகலிங்க புஷ்பா என, அழைக்கப்படும் பூவின் மத்தியில் பகுதி சிவலிங்கம் போன்ற வடிவமும், அதற்கு மேல் பாம்பு இறைவனுக்கு குடை பிடிப்பது போன்று இருப்பதால், சிவலிங்க பூஜைக்கு உகந்த புண்ணியமாக கருதப்படுகிறது. மேலும் பல அரிய மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பது தனி சிறப்பு ஆகும்.