Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவு ... வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா துவக்கம் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பொலிவு பெறுகிறது அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:
புதுப்பொலிவு பெறுகிறது அறநிலையத்துறை

பதிவு செய்த நாள்

19 மே
2021
11:05

நம் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும், கோவில்களை நிர்வகித்து வரும் அறநிலையத்துறை தலைமையகம், கலையம்சத்துடன் விரைவில் புதுப்பொலிவு பெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள, 38 ஆயிரத்து, 600 கோவில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, அறநிலையத்துறை. இதன் தலைமையகம், சென்னை நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் இயங்கி வருகிறது.

பாழடைந்த பங்களா: இங்கு, அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகம், கூட்ட அரங்கம், கூடுதல், இணை கமிஷனர் அலுவலகங்கள், பல்வேறு பிரிவுகள் அலுவலகங்கள், திருக்கோவில் இதழ் அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.இந்த அலுவலகத்தில், நுாற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்காகவும், தலைமை அலுவலகம் வந்து செல்லும் அறநிலையத்துறை அலுவலர்கள் வசதிக்காகவும், உணவகமும் நடத்தப்படுகிறது. மிக பழமையான இக்கட்டடம், பாழடைந்த பங்களா போல காணப்படுகிறது. நவீன தொழில் நுட்ப காலத்தில், இங்குள்ள அலுவலக அறைகள், பழைய காலத்தை காட்சிப்படுத்துகின்றன. பல கமிஷனர்கள் வந்தாலும், தலைமையகம் புனரமைக்கப்படாமல் உள்ளது. தலைமையகம் வந்து செல்பவர்களுக்கு இந்த கட்டமைப்பு புத்துணர்ச்சியை ஏற்படுத்தாமல், சலிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

மன அமைதி: இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், அலுவகத்தை பார்வையிட்ட பின், அங்குள்ள அதிகாரிகளிடம், இது தான் தலைமையகமா; ஏன் இதுவரை புனரமைக்காமல் வைத்துள்ளீர்கள் என, கேட்டுள்ளார்.மேலும், தான் இதற்கு முன் பணியாற்றிய, சிப்காட் அலுவலகத்தை பார்வையிட்டு வரும்படி, அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, சிப்காட் அலுவலகம் சென்ற அலுவலர்கள், அதை பார்த்து அசந்து போயுள்ளனர். பல்வேறு கலை அம்சத்துடன், சிற்பங்கள், ஓவியங்கள் என, கலைக்கூடம் போல காணப்பட்டது. நம் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும், கோவில்களை நிர்வகிக்கும் அறநிலைய துறை தலைமையகத்திற்கு வருபவர்களுக்கு, நல்ல சூழல், மன அமைதி, உற்சாகம் ஏற்பட வேண்டும் என, குமரகுருபரன் அறிவுரை வழங்கி உள்ளார். இதையடுத்து, அறநிலையத்துறை தலைமையகத்தை, பூம்புகார் நிறுவனத்தின் உதவியோடு, கலையம்சத்துடன் புனரமைக்க, குமரகுருபரன் திட்டமிட்டுள்ளதாக, அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar