Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை ... காஞ்சி கோவில் பொக்கிஷ அறையில் உற்சவர் சிலைகள் கண்டெடுப்பு காஞ்சி கோவில் பொக்கிஷ அறையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநீர்மலை கோவிலில் ரோப் கார் சேவை: சாத்தியக்கூறு ஆய்வு
எழுத்தின் அளவு:
திருநீர்மலை கோவிலில் ரோப் கார் சேவை: சாத்தியக்கூறு ஆய்வு

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2021
11:06

திருநீர்மலை: திருநீர்மலை, ரங்கநாத பெருமாள் கோவிலில், பக்தர்களுக்காக, ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற, பிரசித்தி பெற்ற, ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தமிழகத்தின், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பக்தர்கள் வந்து செல்கின்றனர்.நடவடிக்கைசனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, புரட்டாசி மாதத்தில், கட்டுக் கடங்காத கூட்டம் காணப்படும்.கீழே இருந்து, மலைக்கோவிலுக்கு செல்ல, 288 படிக்கட்டுகள் உள்ளன. முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளால், மலைக்கோவிலுக்கு செல்ல முடியவில்லை.இதனால், பக்தர்களின் வசதிக்காக, மலைக்கோவில் வரை, வாகனங்கள் செல்லும் வகையில், சாலை அமைக்க வேண்டும் என்றும், ரோப் கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலில், ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர், நேற்று மாலை, ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, இங்கு ஆய்வு செய்தனர்.பாதுகாப்புபின், அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: பக்தர்களின் வசதிக்காக, ரோப் கார் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தோம். சிதிலமடைந்துள்ள, 13 குடியிருப்புகளை புனரமைக்கவும், படிக்கட்டுகளில் நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, ஒரு அங்குலம் கூட, தனியார் ஆக்கிரமிப்பு செய்ய முடியாத வகையில், பாதுகாப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தினமலர் நாளிதழ் சார்பில், மழலைகளின் பிஞ்சு விரல் பிடித்து கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்கும், ... மேலும்
 
temple news
நவராத்திரி முடிந்த பத்தாவது நாளில் விஜயதசமியை கொண்டாடுகிறோம். இதன் சிறப்புகளை பார்ப்போம்.புதிய ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: ஆயுத பூஜை விழாவையொட்டி, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் வீதியுலா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: செல்லப்பம்பாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில், சரஸ்வதி பூஜையையொட்டி சிறப்பு அலங்கார பூஜைகளும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar