Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவசக்தி விநாயகர் கோவில் மகா ... அம்மன் சிலை சேதம் போலீசார் விசாரணை அம்மன் சிலை சேதம் போலீசார் விசாரணை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூத்த மரத்திற்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பூத்த மரத்திற்கு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2021
09:06

கண்டவராயன்பட்டி: திருப்புத்தூர் அருகே காரையூரில் மரம் பூத்ததற்கு சிறப்பு வழிபாடு , அன்னதானம் செய்து இயற்கையை வழிபட்டனர். நகரமயமாக்கல் என்ற பெயரில் இயற்கைக்கு எதிரான செயல்களில் தெரிந்தோ, தெரியாமலோ மக்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் அது சிலர்தான். இன்றளவும் மக்கள் மரங்களை வழிபட்டு பாதுகாக்கின்றனர். சாதாரணமாக வேப்ப மரங்களில் மஞ்சள் வஸ்திரம் கட்டி, குங்குமம் வைத்து வழிபடுவதை பார்க்கலாம்.

அதற்கும் ஒருபடி மேலாக ஒரு மரம் பூத்ததற்கு சிறப்பு வழிபாடு நடத்தி படையலிட்டு அன்னதானம் செய்து கிராம மக்கள் மகிழ்ந்துள்ளனர். திருப்புத்தூர் ஒன்றியம் காரையூரில் மு. கேசவன் என்பவரின் தோட்டத்தில் கூந்தல் பனை மரம் உள்ளது. கடந்த ஆண்டு இது பூத்துள்ளது. தற்போது அதன் விதைகள் பரவலாக சிதறி வருகிறது. அரச மரத்துடன் பின்னி வளர்ந்துள்ள கூந்தல் பனை மரத்தை தெய்வமாகவே வழிபட்டுள்ளார். இந்நிலையில் 60 ஆண்டுக்கு ஒரு முறை பூப்பதால் மரத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்த கிராமத்தினருடன் முடிவு செய்தார். கொரோனா ஊரடங்கால் தடைபட்டது. தற்போது கொரோனா அலை ஓய்ந்த நிலையில் காரையூர், புதுவளவு கிராமத்தினர் குடும்பத்துடன் தோட்டத்திற்கு வந்து நேற்று காலை மரத்திற்கு சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் அங்கேயே சைவ விருந்துணவு தயார் செய்து அன்னதானமிட்டனர். இதன் மூலம் அப்பகுதியில் பசுமை வளம் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar