Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வழிபாட்டுக்கு தயாராகும் தஞ்சை பெரிய ... அருணாசலேஸ்வரர் கோவில் தரிசனத்திற்கு தயார் அருணாசலேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் தரிசனத்திற்கு கட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் தரிசனத்திற்கு கட்டுப்பாடு

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2021
10:07

பழநி: பழநி மலைக்கோயிலில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு வழிகாட்டு விதிகளின்படி நாளை(ஜூலை.,5-) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பழனியில் மலை கோயிலுக்கு செல்ல குடமுழுக்கு மண்டபம் வழியே படி பாதையை அடைந்து மேலே செல்ல முகக் கவசம், சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்படுவர்.

சளி, காய்ச்சல் உள்ளவர்கள் அனுமதி இல்லை. மலைக்கோயிலுக்கு 10 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். கர்ப்பிணிக்கு அனுமதி இல்லை.ஒரு மணி நேரத்துக்கும் ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். ஒருநாள் முன்னதாக இணையம், தொலைபேசியில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். திருக்கோயிலின் இணையதளத்தில் www.palanimurugan.hrce.tn.govல் திண்டுக்கல் மாவட்டத்தை தேர்வு செய்து இலவச, கட்டண தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும். 04545-242683 என்ற தொலைபேசி எண்ணில் காலை10.00 மணி முதல் 1 மணி வரையிலும் பகல் 2:00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 200 அழைப்புக்கள் பதிவு செய்யப்படும். தரிசத்திக்கு வரும் போது ஆதார் அட்டை கொண்டுவர வேண்டும்.

பஞ்சாமிர்தம், விற்பனை உண்டு அன்னதானம் பொட்டலம் பிரசாதம் உண்டு கோயில் வளாகத்தில் அமர்ந்து உண்ண அனுமதி கிடையாது. தேங்காய், பழம், பூ கொண்டு வர அனுமதி இல்லை. கால பூசை, அமர்வு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை. மலைமீது செல்ல வின்ச் சேவை உண்டு. ரோப் கார் சேவை இல்லை. கோயிலில் அரசு வழிகாட்டுதல்படி முறையாக நின்று வழிபட வேண்டும். திருஆவினன்குடி கோயிலில் ஒரு வழிப்பாதையில் பக்தர்கள் முகக் கவசம், சமுக விலகலுடன் தரிசனத்திற்கு அனுமதிக்கபடுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar