Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி கோவிலில் பக்தர்கள் ... ஆனி கார்த்திகை: திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள் ஆனி கார்த்திகை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெ.நா.பாளையம் கோவில்கள் திறப்பு.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பெ.நா.பாளையம் கோவில்கள் திறப்பு.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2021
10:07

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் உள்ள கோவில்கள் நேற்று திறக்கப்பட்டன. பக்தர்கள் இறைவனை மனமுருக வேண்டினர்.

கோவிட் தொற்று, இரண்டாம் அலை தீவிரமாக இருந்ததால், தமிழகம் முழுவதும் கோவில்கள் அடைக்கப்பட்டன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், பூசாரிகள் மட்டும் கோவிலுக்குள் நுழைந்து, அன்றாடம் இறைவனுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்து வந்தனர். தொற்று ஓரளவு குறைந்து வருவதால், நேற்று முதல் தமிழகம் முழுவதுமுள்ள கோவில்களில் நுழைய, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையொட்டி பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில், வீரபாண்டி லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவில், பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், ஆதி மூர்த்தி பெருமாள் கோவில், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், காளிபாளையம் திருமலைராயப்பெருமாள் கோவில், ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களிலும், குடியிருப்புகளில் உள்ள சிறிய அளவிலான விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கோவில்களில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்த பின் அனுமதிக்கப்பட்டனர். கோவில்களில் நுழைவதற்கு முன்பு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து, கோயிலுக்குள் பக்தர்கள் நுழைந்தனர். பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது. தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு, இறைவனை வழிபட்ட பக்தர்கள், நிம்மதி பெருமூச்சுடன் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar