Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி கோவிலில் பக்தர்கள் ... ஆனி கார்த்திகை: திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள் ஆனி கார்த்திகை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெ.நா.பாளையம் கோவில்கள் திறப்பு.. பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பெ.நா.பாளையம் கோவில்கள் திறப்பு.. பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2021
10:07

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் உள்ள கோவில்கள் நேற்று திறக்கப்பட்டன. பக்தர்கள் இறைவனை மனமுருக வேண்டினர்.

கோவிட் தொற்று, இரண்டாம் அலை தீவிரமாக இருந்ததால், தமிழகம் முழுவதும் கோவில்கள் அடைக்கப்பட்டன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், பூசாரிகள் மட்டும் கோவிலுக்குள் நுழைந்து, அன்றாடம் இறைவனுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்து வந்தனர். தொற்று ஓரளவு குறைந்து வருவதால், நேற்று முதல் தமிழகம் முழுவதுமுள்ள கோவில்களில் நுழைய, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதையொட்டி பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவில், வீரபாண்டி லட்சுமி நரசிங்கப்பெருமாள் கோவில், பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், ஆதி மூர்த்தி பெருமாள் கோவில், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், காளிபாளையம் திருமலைராயப்பெருமாள் கோவில், ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களிலும், குடியிருப்புகளில் உள்ள சிறிய அளவிலான விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் கோவில்களில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்த பின் அனுமதிக்கப்பட்டனர். கோவில்களில் நுழைவதற்கு முன்பு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து, கோயிலுக்குள் பக்தர்கள் நுழைந்தனர். பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடந்தது. தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு, இறைவனை வழிபட்ட பக்தர்கள், நிம்மதி பெருமூச்சுடன் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar