பழநி: பழநியில் தமிழக அரசின் உத்தரவின் வழிகாட்டுதல்படி கோயில்கள் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் (ஜூலை 5) முதல் நேற்று முன்தினம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முககவசம் அணிந்து சமுக விலகலுடன் அனுமதிக்கபட்டனர். காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று ஆனி கார்த்திகையை முன்னிட்டு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்த புஷ்பகலா கூறியதாவது, "பல நாட்களுக்கு பிறகு பழநிஆண்டவரை தரிசிக்க கார்த்திகை விரதம் இருந்து வந்துள்ளேன். திருஆவினன்குடியில் தரிசனம் செய்து கிரிவீதி வலம் வந்தேன். மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது. உலகில் மக்கள் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழ வேண்டும்." என்றார். பழநி ரூபா கூறியதாவது, "மாதம்தோறும் கார்த்திகை விரதம் இருப்பது வழக்கம். அனைவருடன் இணைந்து கோயிலுக்குச் சென்று விரதம் முடிப்பது முழுமையாக மனதில் உற்சாகத்தையும் தருகிறது. படியேறி மீது சென்று பழனி ஆண்டவரையும் தரிசிப்பது மனதிற்கும் உடம்பிற்கும் நல்லது. உலகில் கொரோனா பழநி ஆண்டவர் அருள் புரிவார். " என்றார்.