Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுவாமி சிலை மீது படமெடுத்து ஆடிய ... ரூ.1 கோடி கோவில் நிலம் மீட்பு; கோவையில் அறநிலையத்துறை அதிரடி ரூ.1 கோடி கோவில் நிலம் மீட்பு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குடியிருப்பு கோவில்களில் சிறப்பு பூஜை.. மக்கள் உற்சாகம்..
எழுத்தின் அளவு:
குடியிருப்பு கோவில்களில் சிறப்பு பூஜை.. மக்கள் உற்சாகம்..

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2021
04:07

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் உள்ள காலனி, குடியிருப்புகளில் உள்ள விநாயகர், முருகன் கோவில்களில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜைகள் நடந்தன.

கோவிட் தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், தமிழகம் முழுவதும் தளர்வுகளை, அரசு பிறப்பித்தது. நேற்றுமுன்தினம் முதல் பெரிய மற்றும் சிறிய கோவில்களில் கோவில்களுக்குள், பக்தர்கள் சென்று, இறைவனை வழிபடலாம் என, அனுமதித்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் அதிகாலை, பெரிய கோவில்கள் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், பக்தர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

நேற்றுமுன்தினம் மாலை குடியிருப்புகள், காலனி மற்றும் நகர்களில் உள்ள சிறிய அளவிலான விநாயகர், முருகன், மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில்களின் முன்பு வாழை கம்பங்கள் கட்டி, மாவிலை தோரணங்களுடன், பூஜைகள் நடந்தன. சில கோயில்களில் மாலை, 6:00 மணிக்கு பக்தி பாடல்கள் ஒலி பரப்பப்பட்டன. மாலையில் நடந்த பூஜைகளில், அந்தந்த பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, இறைவனை வழிபட்டனர். இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்புகளில் உள்ள கோவில்களில் அமாவாசை, பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை உள்ளிட்ட சிறப்பு நாட்களில், பூஜைகள் நடக்கும். இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொள்வர். கடந்த இரண்டு மாதங்களாக பூஜைகள் நடக்கவில்லை. கோவில்களில் மீண்டும் பூஜைகள் நடக்கத் துவங்கியது மனதுக்கு நிம்மதியை ஏற்படுத்துகிறது என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar