பதிவு செய்த நாள்
07
ஜூலை
2021
04:07
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி பொன்னியம்மன் கோவில் சுவாமி சிலை மீது நலல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியில் இருந்து, வேங்கானுார் செல்லும் சாலையில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இதை வடிவேல் என்பவர் பராமரித்து, பூஜைகள் செய்து வருகிறார். காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, விஷேச நாட்களில் மட்டும், கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். நேற்று காலை வடிவேல், கோவிலை சுத்தம் செய்ய வந்தபோது, பொன்னிம்மன் சிலை மீது நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியதை பார்த்துள்ளார். பின் பாம்பின் அருகே சென்று துரத்த முயற்சித்தபோதும், பயப்படாமல் அந்த நல்ல பாம்பு சுவாமி சிலையின் மீது படமெடுத்து, சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆடிக்கொண்டிருந்தது. பின்னர், தானாக அவ்விடத்தை விட்டு ஊர்ந்து காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதையறிந்த கிராம மக்கள், கோவிலுக்கு சென்று பொன்னியம்மன்தான் பாம்பு வடிவில் வந்திருப்பதாக எண்ணி, கோவிலில் பூஜை செய்து வழிபட்டு சென்றனர்.