Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோடையிலும் கபாலீஸ்வரர் கோவில் குளம் ... இஸ்கான் கோவில் மீண்டும் திறப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் பராமரிப்பில் மெத்தனம் பக்தர்கள் சரமாரி குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2021
05:07

திருவொற்றியூர்: பழமை வாய்ந்த, காலடிப்பேட்டை, எல்லையம்மன் கோவிலுக்கு, ஏராளமான நன்கொடைகள் குவியும் நிலையில், அதை நிர்வகிக்கும் தனியார் நிர்வாகம், கோவிலை முறையாக பராமரிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. புராதனமிக்கதுசென்னை, திருவொற்றியூர், காலடிப்பேட்டை, சாத்தாங்காடு, மேட்டு தெருவில்,75 ஆண்டுகள் பழமை வாய்ந்த, எல்லையம்மன் கோவில் உள்ளது. இரண்டு ஏக்கர் பரப்பில் உள்ள இக்கோவிலில், விநாயகர், ஆஞ்சநேயர், முருகன் உட்பட பல தெய்வங்களின் சன்னிதிகள் உள்ளன. இங்கு, பிரதோஷம், ஆடி மாத கூழ்வார்த்தல், முருகன் திருக்கல்யாணம் போன்றவை, விஷேசமாக நடைபெறும்.தனியார் பராமரிப்பில் இருக்கும் இக்கோவிலுக்கு, பக்தர்கள் அதிக அளவில் நன்கொடை செலுத்துகின்றனர். எனினும், அதற்கான முறையான கணக்கு வழக்குகள் பராமரிப்பதில்லை என, பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நடவடிக்கைபிரதான சன்னிதியான, எல்லையம்மன் சன்னதியில் உண்டியல் கிடையாது.மாறாக, குடத்தில் மஞ்சள் துணியை கட்டி, அதில் பக்தர்களின் காணிக்கை பெறுவதாகவும், அது குறித்த கணக்குகள் ஏதும் முறையாக நிர்வகிக்கப்படுவதில்லை என்றும் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி குரல் எழுந்துள்ளது. வடிவுடையம்மன், கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அடுத்தபடியாக, அதிக வருவாய் பெறும் இக்கோவிலில், வளர்ச்சிப் பணிகள் ஏதும் செய்யாமல், தனிநபர் லாப நோக்கில், கோவிலை நிர்வகித்து வருவதாகவும், பக்தர்கள் சரமாரி குற்றம் சாட்டுகின்றனர்.பக்தர்களின் அதிருப்தி குரலுக்கு செவிசாய்த்து, கோவிலில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள, நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். வளர்ச்சி இல்லைஎல்லையம்மன் கோவிலில், விழாக்காலங்களில், அதிகளவில் நன்கொடை வசூலிக்கப்படுகிறது. தவிர, காரியத்திற்கு கட்டணமாக, 700 ரூபாய் பெறப்படுகிறது. உண்டியல் பணம் முறையாக எண்ணப்படுவதில்லை. மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாக இருந்தும், இன்னும் வளர்ச்சியடையாமல் உள்ளது.இதை நிர்வகிக்கும் நிர்வாகிகள், வரவு - செலவு கணக்குகளை முறையாக பராமரித்து, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.எஸ். மணவாளன், 69, பக்தர், காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிரம்மோத்சவம் விமரிசையாக நடந்து ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar