Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் ஊழியர்கள் இடம் மாற்றம் செய்ய ... சதுரகிரியில் அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி சதுரகிரியில் அனுமதி: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் மற்றும் தரிசன விழா பொதுமக்கள் பங்கேற்க அனுமதி கோரி இன்று ஆர்ப்பாட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2021
05:07


சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் மற்றும் தரிசன விழாவை வழக்கம்போல் நடத்த அனுமதிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன விழா நேற்று முன்தினம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதியின்றி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு அனுமதி வழங்காததால் வேறுவழியின்றி டீச்சர்கள் மட்டுமே பங்கேற்று கொடியேற்று விழாவை துவங்கினர். இந்நிலையில் வரும் 14ஆம் தேதி தேர்த்திருவிழாவும் 15ஆம் தேதி தரிசன விழாவும் நடைபெற உள்ள நிலையில் அதனையும் கோவிலுக்குள்ளேயே நடத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கலெக்டர் மற்றும் இதை நடத்த அனுமதி கோரி கோரிக்கை வைத்து வந்தனர். அதே சமயம் நேற்று கடலூர் மாவட்டம் வழியாக சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் அது குறித்த கோரிக்கை மனுவையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்து முன்னணி மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் கீழவீதி நடராஜர் கோயில் வாயில் தேர் திருவிழா மற்றும் தரிசனத்திற்கு பக்தர்கள் பங்கேற்கஅனுமதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் கடந்த முறை திருவிழாவின்போது நடந்த அதே பிரச்சனை இந்தமுறையும் நடந்து விடுமோ என போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.  

 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar