Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடி கோயில்களில் குவிந்த ... ராமேஸ்வரத்தில் மூடி கிடக்கும் தீர்த்தம்: பக்தர்கள் வேதனை ராமேஸ்வரத்தில் மூடி கிடக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலங்களுக்கு தனி அடையாள குறியீடு ஏற்படுத்த வேண்டும்
எழுத்தின் அளவு:
கோவில் நிலங்களுக்கு தனி அடையாள குறியீடு ஏற்படுத்த வேண்டும்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2021
10:07

சென்னை; கோவில் நிலங்களுக்கு தனி அடையாள குறியீடு ஏற்படுத்த வேண்டும் என, நில நிர்வாகத் துறைக்கு அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, தனியார் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இது தொடர்பாக, அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், நில நிர்வாகத் துறை கமிஷனருக்கு எழுதிய கடிதம்:தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, கோவில் நில ஆவணங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. வருவாய் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்புடன் முழுமையாக பொருந்தி இருப்பவை; பகுதியாக பொருந்தி இருப்பவை; புதிய விபரங்கள் என, மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் நிலம் தகவல் தொகுப்புடன் முழுமையாக பொருந்தும் ஆவண சொத்துக்கள் குறித்த விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. பகுதியாக பொருத்தும் நிலையில் உள்ள ஆவணங்களில், கூடுதல் விபரங்கள் சேகரிக்கும் பணிகள், இறுதிக் கட்டத்தில் உள்ளன.இந்நிலையில், அறநிலையத் துறை உருவாக்கி உள்ள, ஒருங்கிணைந்த கோவில் மேலாண்மை முறையான ஐ.டி.எம்.எஸ்., சாப்ட்வேரை, பத்திரப்பதிவுக்கான ஸ்டார் -- 2.0 சாப்ட்வேருடன் இணைக்க, பதிவுத்துறை தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பு முடிந்தால், கோவில் நிலங்கள் தொடர்பான பத்திரங்களை தனியார் பதிய வரும்போது, சார் - பதிவாளர்கள் எளிதாக கண்டுபிடித்து தடுக்கலாம். அடுத்த கட்டமாக, வருவாய் துறையின் தமிழ் நிலம் தகவல் தொகுப்பில், கோவில் நிலங்களை, டெம்பிள் என்ற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தான, டி என அடையாளப்படுத்த வேண்டும். இதனால், கோவில் நிலங்களை தனியார் பெயரில், பத்திரப்பதிவு செய்வது முழுமையாக தடுக்கப்படும்.எனவே, தமிழ் நிலம் தகவல் தொகுப்பில், இதற்கான குறியீட்டை சேர்க்க நில நிர்வாகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். நில நிர்வாகத்துறை இதற்கான வழிகாட்டுதல்களை, தகவல் தொகுப்பை நிர்வகிக்கும் தேசிய தகவல் மையமான, என்.ஐ.சி.,க்கு அனுப்ப வேண்டும். உயர் முன்னுரிமை அடிப்படை யில், இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவில் இன்று காலை கல்ப விருட்ச வாகனத்தில் தாயார் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா நாளை (நவ 21ம் தேதி) துவங்கி டிச 7ம் தேதி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மலை மற்றும் காடுகளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar