Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தயார் ... சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ஆடி தபசு மூன்றாம் நாள் விழா சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் நடை திறப்பு: 5 மாதங்களுக்கு பின்னர் தரிசனம் செய்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நடை திறப்பு: 5 மாதங்களுக்கு பின்னர் தரிசனம் செய்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2021
11:07

 சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. ஐந்து மாதங்களுக்கு பின்னர் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் இன்று முதல் தரிசனம் நடத்துகின்றனர்.

கொரோனாவால் கடந்த மாசி மாத பூஜைகளுக்கு பின்னர் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஐந்து மாத இடைவெளிக்கு பிறகு ஆடி மாத பூஜையில் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று முடிந்தது. இரண்டு தடுப்பூசி அல்லது 48 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் கொண்டு வரவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆடி மாத பூஜைக்காக நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிேஷகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஜூலை 21 வரை அனைத்து நாட்களிலும் நெய்யபிேஷகம், கணபதிேஹாமம், உஷபூஜை, களபாபிேஷகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு படிபூஜை, 9:00 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும். ஜூலை 21 இரவு 10:00 மணிக்கு நடைஅடைக்கப்படும். இன்று காலை நடை திறக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். வழக்கமாக இந்த மாத பூஜைகளை தந்திரி கண்டரரு ராஜீவரரு நடத்த வேண்டும். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்துகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில்,  புரட்டாசி மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியில் அனைத்து பைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘கோவில்களால் கலைகள் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளன,’’ என, செம்மொழி தமிழாய்வு மத்திய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar