Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 108 கிலோ மிளகாய் கரைசலில் கோவில் ... மதுக்கடைக்கு அனுமதி: கோவிலுக்கு பூட்டு? ஆதீனம் கவலை மதுக்கடைக்கு அனுமதி: கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசையில் பக்தர்களின்றி வெறிச்சோடியது சதுரகிரி
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசையில் பக்தர்களின்றி வெறிச்சோடியது சதுரகிரி

பதிவு செய்த நாள்

09 ஆக
2021
10:08

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு பக்தர்களின்றி நடந்தது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் வனப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

இக்கோயிலில் வருடந்தோறும் ஆடி அமாவாசை வழிபாடு மிகவும் சிறப்புடன் நடப்பது வழக்கம். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் வருவதற்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது.‌ இந்நிலையில் மலைப்பாதைகள் வழியாக பக்தர்கள் வரலாம் என்பதால் தாணிப்பாறையை சுற்றியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நேற்று முன்தினம் முதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை மிகக் குறைந்த அளவில் கோவிலுக்கு வந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களை போலீசார் அனுமதிக்க மறுத்ததால், அவர்கள் மனவேதனையுடன் திரும்பினர். அதனையும் மீறி வந்த சில பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாசலில் சூடம் ஏற்றி சதுரகிரியை நோக்கி வணங்கி சென்றனர். சிறப்பு அதிரடிப்படை ஐ.ஜி. முருகன், வனத்துறை, அறநிலையத்துறை உயரதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வனத்துறையினர் மட்டும் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்பினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 18 வகை அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்து பாரம்பரிய முறைப்படி அமாவாசை வழிபாடு பூஜைகளை அர்ச்சகர்கள் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். எப்போதுமே ஆடி அமாவாசைக்கு சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்லும் நிலையில், நேற்று பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் சதுரகிரி மலைப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா இன்று காலை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar