Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணியில் ஜாத்திரை பக்தர்கள் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு தீர்த்தவாரி அருணாசலேஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் இருந்து ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலுக்கு மங்கல பொருட்கள்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கத்தில் இருந்து ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலுக்கு மங்கல பொருட்கள்

பதிவு செய்த நாள்

10 ஆக
2021
03:08

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கம் பெருமாள் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் , ரங்கமன்னாருக்கு மங்கல பொருட்கள் கொண்டு வரப்பட்டது.

வருடம் தோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று ஆண்டாள் கோயிலில் பெரியதேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்நிலையில் கொரோனா நோய் பரவல் காரணமாக தேரோட்ட வைபவம் கோயில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் 3 அன்று கொடியேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழாவில், நாளை காலை 6:05 மணிக்கு கோயில் வளாகத்தில் தங்கத்தேர் இழுக்கும் வைபவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் சார்பில் உதவி ஆணையர் கந்தசாமி, சுந்தர் பட்டர் தலைமையில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பட்டு, வஸ்திரம், மங்கல பொருட்கள் கொண்டுவரப்பட்டது. இதனை கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பட்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் மதுரை அழகர்கோவில் சார்பில் மங்கல பொருட்கள் கொண்டு வரப்பட்டு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சாற்றப்பட்டது. 9ம் திருநாளான நாளை காலை பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்கத்தேருக்கு ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருள்கின்றனர். பின்னர் 6:05 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் இன்றி தங்கத்தேர் இழுக்கும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மதுரை : சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வந்த கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர் கோவில் புறப்பட்டார். ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நடப்பாண்டுக்கான வைகாசி பிரம்மோத்சவம், கடந்த 11ம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி ரெணகாளிஅம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar