பழநி: பழநியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றது. விஸ்வ இந்து பரிஷத் சார்பில் பாலசமுத்திரம் பாலாறு-பொருந்தலாறு டேம் மதனபுரம் ஆகிய பகுதிகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடமணிந்து பரிசுகள் வழங்கினார் மேலும் பல்வேறு இடங்களிலும் வீடுகளில் குழந்தைகளுக்கும் கிருஷ்ணர் வேடமணிந்து கொண்டாடினர்.