Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தேரி மகா மாரியம்மனுக்கு சிறப்பு ... சோளீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் மாறநாயனார் குருபூஜை சோளீஸ்வரர் ஞானாம்பிகை கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை, பேரூர் கோவில்களில் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
மருதமலை, பேரூர் கோவில்களில் தடை: ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

07 செப்
2021
12:09

 தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், கோவில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவையில், நேற்று அமாவாசையையொட்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆகிய நான்கு கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என, கலெக்டர் சமீரன் அறிவித்திருந்தார். அதன்படி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கோவிலில், சுவாமிக்கு வழக்கம்போல அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. மருதமலை கோவிலுக்கு வந்த பக்தர்கள், அடிவாரத்திலுள்ள படிக்கட்டு பகுதியிலும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன் மைதானத்தில் நின்றும் சுவாமியை வழிபட்டு சென்றனர்.

சிவகாசியிலிருந்து வந்திருந்த பக்தர் பாண்டியராஜன் கூறுகையில்,"சிவகாசியிலிருந்து, குடும்பத்துடன் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்தோம். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் அனுமதி இல்லை என்பதால், அமாவாசை தினமான நேற்று வந்தோம். ஆனால், கோவையில், நேற்று முக்கிய கோவில்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது தெரியவில்லை. இதனால், கோவிலின் வெளியே நின்று சுவாமியை வழிபட்டு சென்றோம்,"என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், நடராஜ சுவாமிக்கு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளியம்பலத்தில் ஆருத்ரா தரிசனம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar