Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி வீரகாளியம்மன் கோயிலில் சிறப்பு ... இயற்கை பொருளால் விநாயகர் சிலை தயாரிக்க சத்குரு வேண்டுகோள் இயற்கை பொருளால் விநாயகர் சிலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தசரா ஜம்பு சவாரி ஊர்வலம் 8 யானைகள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
தசரா ஜம்பு சவாரி ஊர்வலம் 8 யானைகள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

08 செப்
2021
01:09

மைசூரு : இம்முறை மைசூரு தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்துக்கு, எட்டு யானைகளை அழைத்து வர, வனத்துறை அதிகாரிகள் தயாராகின்றனர்.

மைசூரு மண்டல, துணை வன பாதுகாப்பு அதிகாரி கரிகாலன் கூறியதாவது:கொரோனாவால் கடந்த முறை போன்று, இம்முறையும் மைசூரு தசரா எளிமையாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 7 முதல் 15 வரை தசரா திருவிழா நடக்கும்.சாமுண்டி மலை, அரண்மனை வளாகத்தில் மட்டும், நிகழ்ச்சிகள் நடக்கும். எனவே, ஜம்பு சவாரிக்கு, யானைகளை தயாராக்குவது தாமதமாகிறது.கடந்தாண்டு ஜம்பு சவாரியில், வெறும் ஐந்து யானைகள் மட்டும் பங்கேற்றன. இம்முறை கூடுதலாக மூன்று யானைகள் அழைத்து வரப்படும்.யானைகளின் உடல் ஆரோக்கியத்தை பரிசோதித்த பின், ஒத்திகை துவங்கும். மத்திகோடு முகாமின் அபிமன்யு, 55, கோபாலசாமி, 39, ஆனகோடு முகாமின் விக்ரம், 48, துபாரே முகாமின் காவேரி, 43, தனஞ்செயா, 38, நாகரஹொளேவின் தொட்டஹரவே முகாமின் அஸ்வத்தாமா, 34, பண்டிப்பூர் முகாமின் சைத்ரா, 50, லட்சுமி, 17, தசராவில் பங்கேற்கும்.தனஞ்செயா, கோபாலசாமி, சைத்ரா யானைகள், கடந்த முறை வரவில்லை.

அஸ்வத்தாமா முதன் முறையாக, தசராவில் பங்கேற்கிறது.தசராவில் பங்கேற்கும் யானைகளின் பட்டியல் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அனுப்பியுள்ளோம். பாகன்கள், உதவியாளர்கள் மட்டுமே தசராவில் பங்கேற்பர். அவர்களின் குடும்பத்தினருக்கு வாய்ப்பில்லை.செப்டம்பர் 13 சுப நாளாகும். அன்றைய தினம் தசரா யானைகள் அழைத்து வரப்பட வாய்ப்புள்ளது. அன்று காலை 11:00 மணிக்கு, ஹூன்சூரின் வீரனஹொசள்ளி கேட் அருகில், அபிமன்யு தலைமையிலான யானைகளுக்கு, சம்பிரதாயப்படி பூஜை செய்து, வன பவனுக்கு அழைத்து வரப்படும்.வரும் 16ல் வனத்துறை சார்பில் பூஜை செய்து, அதன்பின் அரண்மனைக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar