Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தோணிமலையில் சஷ்டி பூஜை! அம்புபாச்சி மேளாவிற்கு பின் காமாக்யா கோவில் திறப்பு! அம்புபாச்சி மேளாவிற்கு பின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடபுத்தகத்தில் ஆண்டாள் பற்றி தவறான தகவல்: ஸ்ரீவி.,பக்தர்கள் எதிர்ப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2012
05:06

ஸ்ரீவில்லிபுத்தூர்: மனோன்மணி பல்கலை பாடபுத்தகத்தில், ஆண்டாள் பற்றி தரக்குறைவாக வெளியிட்டதற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மனோன்மணி பல்கலை கழக பாடபுத்தகத்தில் ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தேவதாசியாகவும், பெரியாழ்வாருக்கு தவறான முறையில் பிறந்தவராகவும், ஆண்டாள் மீது வல்லபதேவன் மன்னன் மோகம் கொண்டு பரிசுகள் அனுப்பியதாக கூறப்படும் சிறுகதையை, பாடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாழ்வார் பரம்பரையை சேர்ந்த அனந்தராம கிருஷ்ணன்,வேதபிரான் பட்டர் பெரியாழ்வார் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர், ஆண்டாள் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.மகாலட்சுமியின் அம்சமாக பூமியில் அவதரித்தவர் ஆண்டாள். இதில் தான் பிறக்கும் போது ,தனக்கு பெரியாழ்வார் தந்தையாகவும், துளசி தாயாகவும் இருப்பர் எனக்கூறியுள்ளார். தன்னை கோதை என்று அழைக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார். புராணங்களில் இதற்கான சான்றுகள் உள்ளன. புராணங்களை சரியாக படிக்காமல் மாணவர்களிடையே ஆண்டாள் பற்றி தவறான எண்ணத்தை தோற்றுவிக்கும், இந்த பாடத்தை நீக்க ,பல்கலை கழகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

ஸ்தானிகம் ரமேஷ் தமிழில் ஆண்டாள் நாச்சியார் பாடிய திருப்பாவை அனைத்து வைஷ்ண ஆலயங்களிலும் இன்றும் பாடப்பட்டு வருகிறது. ஆண்டாள் வாழ்ந்த காலம் 8ம் நூற்றாண்டு.ஆனால் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த வல்லபதேவன் மன்னன் அவர் மீது மோகம் கொண்டு பரிசனுப்பினான் எனும் தவறான தகவல்களை பரப்பி ,இந்து தெய்வங்கள், ஆண்டாள், பெரியாழ்வார் எதிராக , மாணவர்களை திசை திருப்பி விடும் செயல், கண்டனத்திற்குரியது. இந்த பாடத்தை அகற்றுவதோடு, இதை எழுதியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். முத்துபட்டர் ஸ்ரீஆண்டாள் பற்றி வரலாறு தெரியாது,புனிதத்துவம் புரியாமல் ,பல்கலை பாடத்திட்டத்தில் தவறான தகவல் கூறியவர்களை கண்டிக்கிறோம், என்றார். விருதுநகர் மாவட்ட பா .ஜ., துணைத் தலைவர் சோலையப்ப்பன் ஆண்டாள், பெரியாழ்வார் மீது கேவலமான தகவல்களை பல்கலை பாடத்தில் சேர்த்துள்ளனர். மனோன் மணியம் பல்கலை நிர்வாகம் பாடத்தை ரத்து செய்வதோடு, அதை எழுதியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar