Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைக்கோவிலில் அனுமதி இல்லை சிவன், பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி வழிபாடு சிவன், பெருமாள் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டல காலத்துக்கு தயாராகிறது சபரிமலை: கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு
எழுத்தின் அளவு:
மண்டல காலத்துக்கு தயாராகிறது சபரிமலை: கூடுதல் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பு

பதிவு செய்த நாள்

19 செப்
2021
02:09

சபரிமலை; நவம்பர் மாதம் தொடங்க உள்ள சபரிமலை மண்டல காலத்துக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு தயாராகிறது. சீசனில் பணியாற்ற தற்காலிக ஊழியர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சபரிமலையில் தற்போது புரட்டாசி மாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் குறைவான பக்தர்களே வருகின்றனர். கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதும், கேரளா சென்று வந்தால் தனிமையில் இருக்க வேண்டும் என்று சில மாநிலங்கள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதும் இதற்கு காரணமாக கருதப்படுகிறது. புரட்டாசி பூஜையில் தினமும் வழக்கமான பூஜைகளுடன் களபாபிேஷகம், உதயாஸ்தமன பூஜை, படிபூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடந்து வருகிறது. செப்.21 வரை நடை திறந்திருக்கும்.நவ., 16ல் தொடங்க உள்ள மண்டல காலத்துக்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்கியுள்ளது. சீசனில் சபரிமலையில் பணியாற்ற விருப்பம் கொண்ட ஹிந்து இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க செப். 30 கடைசி நாள். கடைகளுக்கான டெண்டர் பணிகளும் தொடங்கியுள்ளது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கான மேல்சாந்தி குலுக்கல் தேர்வு அக்.,17 காலை சன்னிதானத்தில் நடைபெறும். இதற்கான நேர்முகத்தேர்வு பணிகளும் தொடங்கியுள்ளது. கடந்த சீசனில் முதலில் இரண்டாயிரம், பின்னர் ஐந்தாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது மாத பூஜையில் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் சீசனில் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் தினமும் அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாக தேவசம்போர்டு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள சுகாதரத்துறை அனுமதிக்குமா என்ற சந்தேகமும் நிலவுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 
temple news
நத்தம்: சிவன் கோயில்களில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar