Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‛இறை சொத்து இறைவனுக்கே: அமைச்சர் ... தத்த பீடத்தில் பூஜை செய்யும் உரிமை அரசு உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட் தத்த பீடத்தில் பூஜை செய்யும் உரிமை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழாவிற்கு வந்தாச்சு பல விதங்களில் கொலு பொம்மை
எழுத்தின் அளவு:
நவராத்திரி விழாவிற்கு வந்தாச்சு பல விதங்களில் கொலு பொம்மை

பதிவு செய்த நாள்

29 செப்
2021
12:09

 உடுமலை: நவராத்திரி விழாவையொட்டி வீடுகள், கோவில்களில் வைக்கப்படும் கொலுவிற்காக, பல்வேறு வடிவிலான பொம்மைகள் உடுமலையில் விற்கப்படுகிறது.


நவராத்திரி கொலு விழா, அக்., 7ல், துவங்குகிறது. இதனையொட்டி, வீடுகளில், பலரும், ஒன்பது படிக்கட்டுகள் வடிவில் கொலு அமைத்து, கடவுள், குழந்தைகள், விலங்குகள், பறவைகள், தலைவர்கள் என பலவித பொம்மைகளை அலங்கரித்து வைப்பர்.தினமும், கொலு பொம்மைகளுக்கு பூஜை செய்து அங்கிருக்கும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பிரசாதம் வழங்கி மகிழ்வர்.அவ்வகையில், உடுமலை நகரில், நவராத்திரி விழாவையொட்டி, கடைகளில், பல்வேறு வடிவிலான பொம்மைகள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பெண்கள், தாங்கள் விரும்பும் பொம்மைகளை ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். அவற்றில், குறிப்பிடத்தக்க வகையில் சிவன், பார்வதி, முருகன், விநாயகருடன் கைலாயத்தில் அமர்ந்திருக்கும் காட்சி கொண்ட பொம்மை, சரவணப் பொய்கையில் தாமரை மீது முருகன் அவதரித்த கோலம், ராவணன் ஆட்சி மன்றக்கூடம் என, பல வண்ணச்சிலைகள் தத்ரூபமாய் காணப்படுகிறது.விற்பனையாளர் ரமேஷ் கூறியதாவது:கொலு பொம்மைகள், 50 முதல், 4 ஆயிரம் ரூபாய் விற்கப்படுகிறது. அதேபோல், கொலு செட் பொம்மைகள், 150 முதல், 3 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.இவை அனைத்தும், தர்மபுரி, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. அதிலும், விதவிதமான மர பொம்மைகள், கர்நாடகாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.அதில், கருங்காலி மரத்தில் உருவாக்கப்பட்ட மரப்பாச்சி பொம்மைகளுக்கு மவுசு அதிகமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar