Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனி திருமஞ்சன விழா திருக்கல்யாண ... ஆழ்வார்குறிச்சி கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அலிங்கியம் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2012
10:06

கோபிசெட்டிபாளையம்: கோபி, அலிங்கியம் பத்ரகாளியம்மன், வீரமார்த்தியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது. காங்கேயம் நாட்டில், 300 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, தூரன் குலத்தவர்கள் குடிபெயர்ந்து, பவானி ஆறுபாயும் அலிங்கியம் பகுதிக்கு வந்தனர். தாங்கள் சுமந்து வந்த கூடையில் உருண்டை வடிவிலான கல்லைக் கண்டு, இதை ஏன் சுமக்க வேண்டும் என எண்ணி இரண்டு முறை அப்புறப்படுத்தினர். ஆனாம், அந்தக்கல் கூடையிலேயே இருந்தது. மூன்றாவது முறையாக அப்புறப்படுத்த முயன்றபோது தெய்வீகத் தன்மையால் கல் நிலை கொண்டது. நம்முடன் வந்தது குலதெய்வமான தேவி ஸ்ரீ பத்ரகாளி அம்மனே என புரிந்து கொண்டு, அவ்விடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இத்திருத்தலமே அலிங்கியம். அருகில் வீரமாத்தியம்மன் வீற்றுள்ளார். ஆண்டுதோறும் சித்திரை விழாவில் பெண்களுக்கு பூஜித்த திருமாங்கல்ய சரடு வழங்குவது தொன்று தொட்ட மரபாக இருந்து வருகிறது. சிறப்புக்குரிய தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மனுக்கு, திருப்பூர் எம்.பி., சிவசாமி தலைமையில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு, பல லட்சம் ரூபாய் செலவில் அழகிய வேலைப்பாடுகளுடன் திருப்பணி முடிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.

கோவில் வளாகத்தில் யாஹ குண்டம் அமைக்கப்பட்டு கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம், தன பூஜை, கோபூஜை, திரவ்யாஹுதி, பூர்ணாகுதி ஹோமங்கள் நடந்தன. நாளை காலை, 9.40 மணிக்கு மேல் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், கும்ப கலசங்களுக்கு ஊற்றப்பட்டு வேத விற்பன்னர்களின் மஹா மந்திரங்கள் முழங்க, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், ரமணீதரன், நாராயணன் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை திருப்பணி குழுத் தலைவர் எம்.பி., சிவசாமி, விழாக் குழுத் தலைவர்கள் சுப்பிரமணியம், பழனிசாமி, பொருளாளர் பெருமாள்கவுண்டர், வெங்கிடு ஆகியோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவில் திருத்தேர் விழா, இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் தயாரிக்கப்பட்ட 51 அடி உயர, 65 டன் எடையிலான ஐம்பொன் ஆதிபராசக்தி ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar