Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்று மேட்டுப்பாளையம் கோவில்கள் ... தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி விழா: மனோன்மணி அலங்காரத்தில் அம்மன் தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கூறி ஆர்ப்பாட்டம்
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கூறி ஆர்ப்பாட்டம்

பதிவு செய்த நாள்

06 அக்
2021
04:10

தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்ககூறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மகாளய அமாவாசையையொட்டி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ஆகிய கோவில்களில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்பணம் செய்யவும் அனுமதி இல்லை என, மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. கோவிலின் நுழைவாயில் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பல்வேறு பகுதியில் இருந்துள்ள நிலையில், கோவில் கதவு அடைக்கப்பட்டுள்ளதால், பக்தர் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. எனவே, கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக்கூறி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் முன், இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் சதீஷ், கோட்ட பேச்சாளர் கிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், பெருர் இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் விமலா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, மாலை, 4:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை திறக்கப்பட்டு, கொடிக்கம்பம் வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனைத்தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். அதேபோல், மாலை, 4:00 மணிக்கு, கோவில் கதவு திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் இன்று பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருப்பவித்ரோத்ஸவம் விழா இன்று 6ம் தேதி துவங்குகிறது. முதல் நாளான ... மேலும்
 
temple news
திருமலை – திருப்பதியில்  ஆண்டுதோறும் நடைபெறும் மிகப்பெரிய ஆன்மிக விழாவான நவராத்திரி  ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; ஆவணி மூலம் திருவிழாவையொட்டி, ஒய்யார நடனமாடியபடி திரிபுர சுந்தரி சமேத தியாகராஜ ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar