Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்சவம்: கருட ... நவராத்திரியில் இரு தலை, 3 கண்களுடன் பிறந்த கன்று; துர்காவின் அவதாரம் என மக்கள் வழிபடல் நவராத்திரியில் இரு தலை, 3 கண்களுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை அடிவாரம் அலிபிரியில் ரூ.15 கோடியில் கோ மந்திர்
எழுத்தின் அளவு:
திருமலை அடிவாரம் அலிபிரியில் ரூ.15 கோடியில் கோ மந்திர்

பதிவு செய்த நாள்

12 அக்
2021
04:10

திருப்பதி: திருமலை திருப்பதி கோவிலின் அடிவாரத்தில் உள்ள அலிபிரியில், கோ மந்திர் எனப்படும், பசுவுக்கான சிறப்பு கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.திருமலை திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தொழிலதிபர் ஏ.ஜி.சேகர், 15 கோடி ரூபாய் செலவில், இந்த கோவிலை கட்டி நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:நீண்ட நாட்களாக, நான் திருமலை பெருமாள் பக்தன். அவர் என் வாழ்வில் தந்த ஏற்றத்திற்கும் மாற்றத்திற்கும், நான் செலுத்தும் சிறு காணிக்கை தான் இந்தக் கோவில். கோ மந்திர் எனப்படும் பசுவிற்கான கோவிலில், எப்போதும் ஏழு பசுக்கள் இருக்கும். பக்தர்கள் வந்து பசுவையும், பசுவுடன் கூடிய கண்ணனையும் வழிபாடு செய்யலாம்.பசுக்கள் ஒய்வு எடுக்க, மின் விசிறி வசதியுடன் கூடிய அறைகள், ஆரோக்கியமாக உலாவ சிறு புல்வெளி மைதானம் போன்றவைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

கோ துலாபாரமும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. துலாபாரத்தின் ஒரு பக்கம் பசு நிற்க வைக்கப்பட்டு, மறுபக்கம் அதன் எடைக்கு நிகரான பொருட்களை, பக்தர்கள் கோவிலுக்கு வழங்கலாம்.பசுவின் முக்கியத்துவம் மற்றும் அதன் மகத்துவம் குறித்து அறிந்து கொள்ள, இங்குள்ள சிறு அரங்கத்தில் குறும்படம் வெளியிடப்படும். விளக்க கையேடும் கொடுக்கப்படும். கோ மந்திரில் உள்ள பசுவோடு கூடிய கிருஷ்ணன் சிலை, ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. கருங்கற்களால் கோவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது; இரவு விளக்குகள், மத்திய பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளன. இதன் நாமம், இரவில் ஒளிரும் தன்மை கொண்டதாகும்.பக்தர்கள் திருமலைக்கு ஏறும் முன்பாக, இங்கே வந்து செல்லலாம். பசுக்களையும் கிருஷ்ணரையும் வணங்கிச் செல்லலாம் வேண்டிக் கொள்ளும் பக்தர்கள், துலாபாரத்தில் நிறுத்தப்படும் பசுவின் எடைக்கு நிகராக, தானியங்கள், வெல்லம், நாணயங்கள் போன்றவைகளை வழங்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி:  பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்: ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில், ஏராளமான வெளி மாநில பக்தர்கள் ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா 7 கிராம மக்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநீர் அண்ணாமலை கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை ... மேலும்
 
temple news
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar