Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சிவசடையப்பர் கோவிலில் 13ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தப்புரத்தில் கும்பாபிஷேகம்: ஏராளமானோர் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2012
10:06

எழுமலை: மதுரை மாவட்டம் உத்தப்புரத்தில் முத்தாலம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். உத்தப்புரத்தில் இரு பிரிவினருக்குள் அரச மர வழிபாடு, நிழற்குடை கட்டுதல் பிரச்னைகளால் பல ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அங்கு புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையால் ஒரு பிரிவினருக்கு சொந்தமான புனரமைக்கப்பட்ட முத்தாலம்மன், மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு போலீசார் தடை விதித்தனர்.எஸ்.பி., யாக இருந்த அஸ்ரா கர்க் தலைமையில் இரு பிரிவினருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் புனரமைக்கப்பட்ட முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் புனிதநீர் தெளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.கும்பாபிஷேகத்தை காண திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அஸ்ரா கர்க் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் தெற்கு தெருவில் இருந்து ஒரு பிரிவினர் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நிகழ்ச்சியை கோயில் வெளியில் இருந்து பார்த்தனர். பின் மாலை சாத்துவது குறித்து சிறு சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்தனர். எஸ்.பி., பாலகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன், எழுமலை இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், எம்.எல்.ஏ., கதிரவன், டி.ஐ.ஜி., பாலநாகதேவி, உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சாந்தி, பேரையூர் தாசில்தார் கல்யாணசுந்தரம், திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில இணை அமைப்பாளர் சின்மயா சோமசுந்தரம், பா.ஜ., கல்வியாளர் அணி துணைத் தலைவர் பொன்.கருணாநிதி, இந்து முன்னணி நிர்வாகி ரவிக்குமார் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar