Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மணவாள மாமுனிகள் அவதார நட்சத்திர ... இன்று கந்த சஷ்டி .. உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா ...! இன்று கந்த சஷ்டி .. உந்தன் அருளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்பாத்தி தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
கல்பாத்தி தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 நவ
2021
05:11

பாலக்காடு: பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பாலக்காடு கல்பாத்தியில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவிலில், ஐப்பசி மாதம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழாவின் துவக்கமாக காலை 7:30 மணி அளவில் சிறப்பு பூஜை நடந்தது. 9.45 மணி அளவில் கோவில் தந்திரி பிரபு சேனாபதி தலைமையில் கொடியேற்றம் நடந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காலமானதால் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கொடியேற்ற நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் பரவல் அதிகமானதைத் தொடர்ந்து கொண்டாட்டங்களின்றி கோவில் வளாகத்தினுள் வெறும் சடங்காக மட்டும் விழாவை நடத்தினர். ஆனால் இம்முறை அரசின் கட்டுப்பாடுகள் சில தளர்வுகள் ஏற்படுத்தியதையடுத்து விழாவை நடத்த கோவில் நிர்வாகத்தினர் தீர்மானித்தனர். இதையடுத்து விழா நடத்த அனுமதி கேட்டு கோவில் நிர்வாகம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த அரசு, கோவிலினுள் 100 பேரும் வெளியே 200 பேரும் பங்கேற்கும் வகையில் சில வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி விழா நடத்த அனுமதி அளித்தன. வரும் 14, 15,16 தேதிகளில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. பெரிய தேர்களில் அமர்ந்து முலவர் வீதி உலா வரும் நிகழ்ச்சி இம்முறையில் நடக்காது. இவ்வைபவம் பல்லக்குகளிலும் சிறு தேர்களிலுமாக நடைபெறும். தேர் திருவிழாவை முன்னிட்டு, நடக்கும் சங்கீத உற்சவம் இம்முறை கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து ரத்து செய்துள்ளன. வரும் 14ம் தேதி வரை மாலையில் மூலவர்கள் எழுந்தருளல் உட்பட உள்ள நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar