Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பாத்தி தேர்த் திருவிழா ... திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்.. பக்தர்களுக்கு அனுமதி இல்லை திருச்செந்தூரில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று கந்த சஷ்டி .. உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா ...!
எழுத்தின் அளவு:
இன்று கந்த சஷ்டி .. உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா ...!

பதிவு செய்த நாள்

09 நவ
2021
08:11

திருச்செந்தூர் கோயிலை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

* பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் உள்ளனர்.

* காவல் தெய்வமாக வீரபாகு உள்ளதால் இத்தலத்துக்கு வீரபாகு பட்டினம் என்றும் பெயர் உண்டு. தினம் வீரபாகுவுக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

* மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. கட்டம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறைக்கு பாம்பறை என்று பெயர்.

* கோயிலின் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்கு கொண்ட இந்த கோபரம் 157 அடி உயர் கொண்டது.

* அருணகிரி நாதர் 83 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளனார்.இதை தினமும் பாடினால் கந்தலோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.

* கோயில் அமைப்பு பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் உள்ளது.

* சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலம் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.

* மூலவர் முன் உள்ள இடத்தை மணியடி என்பவர், இங்கு நின்று சுவாமியை தரிசிப்பது சிறப்பு.

* நாழிக்கிணறு 24 அடி ஆழம் கொண்டது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும்.

* மவுனசாமி காசிநாத சுவாமி ஆறுமுகசாமி மூவரும் கோயில் திருப்பணிக்காக தங்கள் வாழ் நாளை இவர்களின் சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.

* இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில் இருந்ததாக வரலாறு கூறுகிறது.

* மன்னார் வளைகுடாவின் கைரேயோரத்தில் அலைகள் தழுவ அமைந்திருப்பதால் , அலைவாய் என்று அழைக்கப்பட்டது. திரு என்றும் அடைமொழியுடன் திருச்சீரலைவாய் எனப்படுகிறது.

* கோயிலுக்கு செல்லும் வழியில் தூண்டுகை விநாயகர் கோயில் உள்ளது. இங்கு வணங்கிய பின்னரே முருகனை வணங்க செல்ல வேண்டும்.

* முருகனின் வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாப்பாடு என்னும் இடம் ஆகும். தற்போது மணப்பாடு எனப்படுகிறது.

* முருகனின் அவதார நோக்மே அசுரர்களை அழிப்பதுதான். அந்த அவதார நோக்கம் நிறைவேறியது இங்கு தான்.

* ராஜகோபுரம் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெயவானை திருமண நாளில் மட்டும் திறக்கப்படும்.

* பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசப்பாடலும், உள் பிரகாரங்களில் தல வரலாற்றை விளக்கும் வரைபடங்களும் உள்ளன.

* முருகனின் வரலாறறை படிப்போரும் கேட்போரும் வளமான வாழ்வு பெறுவர் என்று சூதக முனிவர் கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar